சிம்ரனின் இரண்டாவது மகனா இவர்? புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்..!

  • IndiaGlitz, [Tuesday,March 21 2023]

நடிகை சிம்ரனின் இரண்டாவது மகனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளதை அடுத்து இது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். சிம்ரனின் இரண்டாவது மகன் இவ்வளவு பெரியவர் ஆகிவிட்டாரா என ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் சிம்ரன் என்பதும் இவர் அஜித், விஜய், சூர்யா உட்பட பல பிரபலங்களுடன் நடித்தார் என்பது தெரிந்ததே. தற்போது கூட அவர் ’துருவ நட்சத்திரம்’ ’வணங்காமுடி’ ’அந்தகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிசியான நடிகையாக உள்ளார்.

இந்த நிலையில் நடிகை சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு தனது பள்ளிக்காலத் தோழர் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தீபக்-சிம்ரன் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சிம்ரன் தனது இரண்டாவது மகனான ஆதித் வீர் என்பவரின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் வீடியோவாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் பார்த்து சிம்ரனின் இரண்டாவது மகனே இவ்வளவு பெரியவர் ஆகிவிட்டாரா என ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை சிம்ரன் தனது மகனுக்கு கூறிய பிறந்தநாள் வாழ்த்தில், ’மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கி, உங்கள் வழியில் வரும் அனைத்து வாய்ப்புகளையும் அரவணைத்துக்கொள்ள இதோ மற்றொரு ஆண்டு. எனது வீர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

More News

குறிபார்த்து அடித்த நதியா: படப்பிடிப்பின் இடையே எடுத்த வீடியோ வைரல்..!

நடிகை நதியா வில்லிலிருந்து குறி பார்த்து அம்பை விட்ட வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது .

44 வயதில் தொழிலதிபருடன் திருமணம்: ரஜினி, கமல் பட நடிகைக்கு ரசிகர்கள் வாழ்த்து..!

ரஜினி, கமல், சரத்குமார் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை ஒருவர் 44 வயதில் திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'வலி தெரியாம இருக்க, அதைவிட பெரிய வலியை கொடுக்கணும்: 'ஆகஸ்ட் 16 1947' டிரைலர்..!

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில், பொன் குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிய திரைப்படம் 'ஆகஸ்ட் 16 1947'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

பாக்யராஜ் குடும்பத்திற்கு நன்றிக்கடன்.. ஷாந்தனு படத்தின் தயாரிப்பாளர் துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி..!

துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பில்  சாந்தனு நடிப்பில் உருவான திரைப்படம் 'ராவண கூட்டம்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்தது

அஜித், விஜய், விக்ரம் பட வில்லன் இறந்ததாக வதந்தி.. அவரே அளித்த விளக்கம்..!

அஜித், விஜய், விக்ரம் உள்பட  பல பிரபலங்களின் படங்களில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவர் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில் அவரே இதற்கு வீடியோ ஒன்றின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.