close
Choose your channels

பாக்யராஜ் குடும்பத்திற்கு நன்றிக்கடன்.. ஷாந்தனு படத்தின் தயாரிப்பாளர் துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி..!

Tuesday, March 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பில் சாந்தனு, கயல் ஆனந்தி நடிப்பில் உருவான திரைப்படம் ’ராவண கூட்டம்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்தது என்பதும் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு இதுவரை இல்லாத அளவில் பல அரசியல், திரையுலக பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அமைச்சர் துரைமுருகன், எம்பிக்கள் கலாநிதி விராசாமி, கனிமொழி, இயக்குனர்கள் பாக்யராஜ், வெங்கட்பிரபு, நடிகைகள் ராதிகா, குஷ்பூ, மீனா, நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர் சதீஷ், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, நடிகர்கள் பிரேம்ஜி, பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் தொழிலதிபர்களான லைகா சுபாஷ்கரன், விஜிபி சந்தோஷ், பிரிட்டோ சேவியர் ஆகியோர்களும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா அரசியல் மற்றும் தொழிலதிபர்கள் என பல விஐபிகள் கலந்து கொண்ட இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இந்த படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி துபாயை அடிப்படையாக கொண்ட கேஆர்ஜி குரூப் ஆஃப் கம்பெனி நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். தமிழ்நாட்டின் திட்டக்குடி என்ற பகுதியை சேர்ந்த இவர் சாதாரண தொழிலாளியாக துபாய் சென்று இன்று கேஆர்ஜி குரூப் ஆஃப் கம்பெனி என்ற நிறுவனத்திற்கு சொந்தக்காரராக இருக்கும் அளவிற்கு கடும் உழைப்பால் உயர்ந்துள்ளார்.

இந்த நிலையில் முதல் முறையாக அவர் தமிழ் திரையுலகில் களமிறங்கியுள்ள நிலையில் அவர் தயாரிக்கும் திரைப்படம் தான் ’ராவண கோட்டம்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை இதுவரை தமிழ் திரை உலகம் கண்டிதாக அளவில் மிகவும் பிரமாண்டமாக துபாயில் நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் கண்ணன் ரவி ’பாக்யராஜ் அவர்களுக்கு தான் நன்றி கடன் பட்டுள்ளதாகவும், அதற்காகவே இந்த திரைப்படத்தில் சாந்தனுவை நாயகன் ஆக்கி உள்ளதாக தெரிவித்தார். கண்ணன் ரவி அவர்களின் திருமணம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த போது ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டதாகவும், இந்த பிரச்சனை காவல் நிலையம் வரை சென்ற நிலையில் அப்போது தனது நண்பர் ஒருவர் பாக்யராஜை தொடர்பு கொண்டு உதவி கேட்டபோது, கண்ணன் ரவியை யார் என்றே தெரியாத நிலையில் பாக்யராஜ் காவல் நிலையத்திற்கு போன் செய்து உதவி செய்ததாகவும் அவரது உதவியின் காரணமாக தான் அன்று ஏற்பட்ட தன்னுடைய திருமண சிக்கல் தீர்ந்ததாகவும் கண்ணன் ரவி தெரிவித்துள்ளார்.

தான் யார் என்று தெரியாத நிலையிலும் பாக்யராஜ் அவர்கள் தனக்காக காவல் நிலையத்திற்கு போன் செய்து தன்னுடைய சிக்கலை தீர்த்ததை அடுத்து அவர் பாக்யராஜ் குடும்பத்துடன் நெருக்கமானதாகவும் பல ஆண்டுகளாக இரு குடும்பத்தினரும் நட்பாக பழகி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து தான் தயாரிக்கும் முதல் படத்தில் சாந்தனுவை நடிக்க வைக்க முடிவு செய்ததாக கண்ணன் ரவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.