போதை மருந்து தயாரிக்கிறதே உங்க ஊர்ல தான்: கங்கனாவுக்கு கமல் பட நடிகை பதிலடி!

போதைப்பொருள் தயாரிப்பதே உங்க ஊரில் தான் என்றும் அதை முதலில் சுத்தப்படுத்திவிட்டு அதன் பிறகு மும்பைக்கு வாருங்கள் என்றும் கங்கனாவுக்கு கமல் பட நடிகை பதிலடி கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று கொண்டிருப்பவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். குறிப்பாக சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக போதை மருந்து கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார்.

மேலும் பாலிவுட் திரையுலகில் உள்ள பலரும் போதை பழக்கத்திற்கு உள்ளானவர்கள் என்றும் அவர்களிடம் விசாரணை செய்தால் அனைவரும் சிறையில் கம்பி எண்ண செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கமல் நடித்த ‘சாணாக்யன்’ மற்றும் ’இந்தியன்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஊர்மிளா கங்கனாவின் குற்றச்சாட்டு குறித்து கூறிய போது, ’போதைப் பொருளின் பிறப்பிடமே கங்கனா ரனாவத்தின் சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசம் தான் என்றும், அங்குதான் போதைப் பொருளே உற்பத்தி செய்யப்படுகிறது என்றும், முதலில் கங்கனா தனது சொந்த மாநிலத்தை சுத்தப்படுத்தி விட்டு அதன் பின்னர் மும்பைக்கு வரட்டும்’ என்று கூறியுள்ளார்.

மும்பை அனைவருக்கும் சொந்தமான நகரம் என்பதில் சந்தேகமே இல்லை என்றும், மும்பையின் மகளான என்னால் அந்த நகரத்திற்கு எதிரான அவமதிப்பு கருத்துகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், மும்பைக்கு எதிராக ஒரு கருத்தை சொன்னால், அது அந்நநகர மக்கள் அனைவரையும் அவமரியாதை செய்வதற்கு சமம்’ என்றும் ஊர்மிளா கூறியுள்ளார்.

More News

100 நாள் வீடு, 100 நாள் பிக்பாஸ் வீடு, இதுதான் கமல் அரசியல்: அமைச்சர் ஜெயகுமார்

கொரோனா வைரஸ் பயம் காரணமாக 100 நாட்கள் வீட்டுக்குள் இருந்த கமல்ஹாசன், அடுத்ததாக பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்கவுள்ளார் என்று அமைச்சர் ஜெயகுமார் கிண்டலடித்துள்ளது

எந்த சாமியும் செய்யாததை எடப்பாடி பழனிசாமி செய்தார்: காமெடி நடிகர்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கொரோனா வைரஸ் காரணமாக கலைவாணர் அரங்கில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே.

இலவச விளம்பரம் ஆரம்பிச்சுட்டீங்க போல: சூர்யா பட பாடல் பிரச்சனை குறித்து விஜய் பட இயக்குனர்!

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் குறித்த வழக்கு ஒன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது

தமிழக அமைச்சரை நேரில் சந்தித்த கே.பாக்யராஜ்: என்ன காரணம்?

கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் சங்கரதாஸ் சுவாமி அணியின் சார்பில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகரும் இயக்குனருமான கே பாக்யராஜ்

ஆன்லைன் வகுப்பு கொடுமை… பாடம் புரியாததால் 10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!!!

சிவகங்கை அருகே ஆன்லைனில் நடத்தும் பாடம் புரியாமல் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.