close
Choose your channels

நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்.. என்ன வழக்கு?

Tuesday, April 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார் விபத்து வழக்கில், நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் மாமல்லபுரம் அருகே விபத்துக்குள்ளானது என்பதும், இந்த விபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பவானி செட்டி என்ற யாஷிகாவின் நெருங்கிய தோழி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த் தனது தோழிகள் மற்றும் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்ததாகவும், அவர் சென்ற கார் மாமல்லபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் யாஷிகா ஆனந்த் மற்றும் 2 ஆண் நண்பர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் பவானி செட்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இவர் யாஷிகாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் என்றும் கூறப்பட்டது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment