கமல் கட்சியில் ஐந்து பொதுச்செயலாளர்கள்: அதிரடி உத்தரவு

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஏற்கனவே அருணாச்சலம் என்பவர் பொதுச்செயலாளராக இருந்து வரும் நிலையில் தற்போது மேலும் 4 பேர்கள் பொதுச்செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4 புதிய பொதுச்செயலாளர்களாக ஏஜி.மௌர்யா, வி.உமாதேவி, ஆர்.ரங்கராஜன், பஷீர் அகமது ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த உத்தரவை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சற்றுமுன் பிறப்பித்துள்ளார்.

எனவே மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அருணாச்சலம், ஏஜி.மௌர்யா, வி.உமாதேவி, ஆர்.ரங்கராஜன், பஷீர் அகமது ஆகிய ஐவர் இனிமேல் பொதுச்செயலாளர்களாக செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட மக்கள் நீதி மய்யம் கட்சி வெற்றி பெறவில்லை என்றாலும், வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற தீவிர களப்பணி செய்து வருகிறது. மேலும் இக்கட்சிக்கு அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுவதால் இனிவரும் தேர்தலில் கமல் கட்சி வெற்றி வாகை சூடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


 

More News

'மாநாடு'க்கு பதில் 'மகா மாநாடு': சிம்புவின் அதிரடி முடிவு

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் திட்டமிட்டிருந்த 'மாநாடு' திரைப்படத்தில் இருந்து திடீரென சிம்பு நீக்கப்பட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ஒருவழியா சண்டையில் கலந்து கொண்ட லாஸ்லியா: மதுமிதாவுக்கு இது தேவையா?

பிக்பாஸ் வீட்டில் மதுமிதா திடீரென ஆவேசம் அடைந்து ஆண்கள் பெண்களை அடக்குவதாகவும், ஆண்கள், பெண்களை அடிமைப்படுத்துவதாகவும்

கிருஷ்ணர், அர்ஜுனர் பேச்சு இப்போது தேவையா? ரஜினியை மறைமுகமாக விமர்சித்த பாடலாசிரியர்!

சமீபத்தில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் மோடி, அமித்ஷாவை கிருஷ்ணர், அர்ஜுனர் என ரஜினிகாந்த் ஒப்பீடு செய்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுசா வந்திருக்கே ஒரு காக்கா... கஸ்தூரியை கலாய்த்த கவின்! 

வனிதாவின் வருகை பிக்பாஸ் வீட்டில் ஒரு புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டது போலவே நேற்று வனிதாவின் நாரதர் வேலையால் முகின் -அபிராமி பிரச்சனை எரிமலையாக வெடித்தது

வனிதாவின் அடுத்த டார்கெட் மதுமிதாவா? திடீரென பொங்கி எழுந்ததால் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் வருகைக்குப்பின் பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் பெரும் பரபரப்படைந்தனர். குறிப்பாக ஆண் போட்டியாளர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் வனிதாவின் செயல்பாடுகள் இருந்தது