கூவத்தூர் விடுதியில் நடப்பது என்ன? காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. தமிழ்செல்வன் பேட்டி

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

அதிமுக எம்.எல்.ஏக்களை சசிகலா தரப்பு கூவத்தூரில் உள்ள நட்சத்திர விடுதியில் அடைத்து வைத்திருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்த வழக்கு ஒன்று நேற்று நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. தமிழ்செல்வன் இன்று நேரடியாக கூவத்தூர் சென்று அங்கு தங்கியிருந்த எம்.எல்.ஏக்களிடம் அவர்களுடைய கருத்தை கேட்டறிந்தார்.

கூவத்தூர் விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியதாகவும், சுய விருப்பத்தின் பேரிலேயே விடுதியில் அவர்கள் தங்கியிருந்ததாக தெரிவித்ததாகவும், தங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என அங்கு தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் தெரிவித்ததாகவும் காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. தமிழ்செல்வன் சற்று முன்னர் பேட்டியளித்துள்ளார். மேலும் எம்.எல்.ஏக்களின் எழுத்துபூர்வ ஆவணங்களை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கூவத்தூர் நட்சத்திர விடுதியை தவிர பண்ணை வீடு ஒன்றிலும் எம்எல்ஏக்கள் தங்கியுள்ளதாக வந்த தகவலை அடுத்து டிஎஸ்பி எட்வர்டு தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு சென்று ஆய்வு நடத்தி வருவதாகவும், இங்குள்ள எம்.எல்.ஏக்களின் நிலை மிக விரைவில் தெரியவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மாபா பாண்டியராஜனை அடுத்து ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு அதிமுக விஐபி

முன்னாள் காவல்துறை அதிகாரியும், மைலாப்பூர் எம்.எல்.ஏவுமான கே.நட்ராஜ் அவர்களும் ஓபிஎஸ் அணிக்கு வரவுள்ளதாகவும், அவர் அனேகமாக இன்று மாலை முதல்வரை சந்தித்து தனது ஆதரவை தெரிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது...

மேலும் ஒரு அதிமுக அமைச்சர் ஓபிஎஸ் அணிக்கு வருகையா?

நேற்று வரை சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து கொண்டிருந்த அமைச்சர் மாஃபா பாண்டியாராஜன் அவர்கள் தற்போது ஓபிஎஸ் அணிக்கு வர தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது...

முதல்வர் ஓபிஎஸ்-க்கு இரண்டு அதிமுக எம்பிக்கள் ஆதரவு

தமிழக அரசியல் தற்போது முயல்-ஆமை கதை போல சென்று கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் 130 எம்.எல்.ஏக்களும், 37 எம்பிக்களும் சசிகலாவுக்கு ஆதரவு என்றும், முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு வெறும் 3 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வேகமாக முயல் தூங்கியது போலவும், மெதுவாக சென்ற ஆமை வெற்றி பெற்றது போலவும் ஓபிஎஸ் அவர்களின்

சட்டப்பேரவை கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும். கவர்ன்ரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை சற்றுமுன்னர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருடைய பொறுப்புகளை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஏற்றுக்கொண்டது...

எந்த அறிக்கையும் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. ஆளுனரின் செய்தித்தொடர்பாளர் தகவல்

நேற்று இரவு மத்திய அரசுக்கு கவர்னர் ஒரு அறிக்கை அனுப்பியதாகவும், அந்த அறிக்கையில் சசிகலாவை ஆட்சி அமைக்க உடனே அழைப்பு விடுக்க முடியாது என்று கூறியதாகவும் செய்திகள் வெளிவந்தன...