உறுதியாக அம்மாவின் ஆட்சி தொடரும்: சேலத்தில் முதலமைச்சர்  உறுதி!

மீண்டும் அதிமுக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்றும், உறுதியாக அம்மாவின் ஆட்சி தொடரும் என்றும் சேலம் மாவட்டம் ஓமலூரில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெறும். உறுதியாக அம்மாவின் ஆட்சி தொடரும்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரசாங்கத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

எந்த சூழ்நிலையில் எதை செய்ய வேண்டுமோ அந்த அந்த சூழ்நிலையில் அதற்கேற்றார் போல அரசாங்கம் செயல்படும்.

நான் சென்ற இடம் எல்லாம் சிறப்பாக எழுச்சியாக மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சி அளிக்கிறது. அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெறும். உறுதியாக அம்மாவின் ஆட்சி தொடரும்.

அ.ம.மு.க கட்சி என்று சொல்ல முடியுமா? அ.தி.மு.க வேறு அ.ம.மு.க வேறு. அ.ம.மு.க மூக்கை நுழைத்து பார்க்கிறது, நிச்சயம் ஒன்றும் நடக்காது. அ.ம.மு.கவிலிருந்து விலகி அ.தி.மு.கவில் சேர விருப்பபட்டால் தலைமை முடிவு செய்யும்.

தி.மு.க பொது எதிரி, சேர்ந்துதான் முறியடிக்க வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்து அவருடைய சொந்த கருத்து, இதுக்கு நாங்கள் எப்படி கருத்து சொல்ல முடியும். அ.தி.மு.கவை பொறுத்த வரை எம்.ஜி.ஆர் அவர்கள் தி.மு.க ஒரு தீய சக்தி என்று கூறினார், அவர்களை எதிரி கட்சியாக பார்க்கிறோம். அவர்களை எதிர்த்தே போட்டியிட்டு தொடர்ந்து போராடி வெற்றி பெற்று வருகிறோம்.

சசிகலா அதிமுக கட்சியில் இல்லை என்பதால் அவர் குறித்து ஏன் பேச வேண்டும். டி.டி.வி தினகரன் எங்கள் கட்சியை சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களை பிரித்து கொண்டு சென்று ஆட்சியை கவிழ்க்க வேண்டும், கட்சியை உடைக்க வேண்டும் பிரிக்க வேண்டும் என்று செயல்பட்டார். ஆனால் கட்சியை உடைக்க முடியவில்லை அ.ம.மு.க என்று ஒரு கட்சியை தொடங்கினார். அதனால் அவரை பற்றி பேசுகிறோம்.

உச்ச நீதி மன்றம் ஊழல் குற்றசாட்டு உள்ளவர்களை விசாரிக்க தனி நீதி மன்றம் அமைத்துள்ளது. இது தெரியாமல் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார். தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் 23 பேர் மீது ஊழல் புகார் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.

முக ஸ்டாலின் அவருடைய கட்சியை பற்றி கவலைபட வேண்டும். அழகிரி பற்றி அவர் பேசட்டும். திட்டமிட்டு விஷமத்தனமான பிரச்சாரத்தை தி.மு.கவினர் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு எள் மணி அளவு கூட எங்கள் கட்சியில் பிளவை ஏற்படுத்த முடியாது.

13 ஆண்டு காலம் தி.மு.க மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள், என்ன திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தார்கள்.

அ.தி.மு.க ஆட்சியில் ஒரே வருடத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் உதவி பெற்று தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

எங்களை பொருத்தவரையில் அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் எதையும் சந்திக்க தயாராக இருக்கின்றேன். அச்சுறுத்தல் கேள்விக்கே இடமில்லை’ இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

More News

தி.மு.கவின் “பி' டீமா சசிகலா?

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா தமிழகம் திரும்பியுள்ள நிலையில், அவருடைய வருகை குறித்து தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள்

அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை, எதையும் சந்திக்க தயார்: முதல்வர் பழனிசாமி

அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், நான் எதையும் சந்திக்க தயாராக இருக்கின்றேன் என்றும், அச்சுறுத்தல் என்ற கேள்விக்கே இடமில்லை என்றும் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களின்

விஷ்ணுவிஷாலின் அடுத்த படத்தில் இணைந்த முன்னணி நடிகை!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வரும் காடன், எப்.ஐ.ஆர், ஜெகஜ்ஜால கில்லாடி மற்றும் மோகன்தாஸ் ஆகிய நான்கு திரைப்படங்கள் தயாராகி வருகிறது என்பதும் இவற்றில் காடன் திரைப்படத்தின்

போனிகபூரின் மாஸ் 'வலிமை' அப்டேட்: ஸ்தம்பிக்கும் சமூக ஊடகங்கள்!

அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக 'வலிமை' படத்தின் எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகும் நட்சத்திர தம்பதியின் மகள்!

தமிழ் தெலுங்கு திரை உலகின் நட்சத்திர தம்பதிகளின் மகள் தமிழ் திரைப்படம் ஒன்றில் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது