close
Choose your channels

ஜெயம் ரவியின் 'இறைவன்' படத்தில் 15 வருடங்களுக்கு பின் இணைந்த ஜோடி..!

Friday, September 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் அகமது இயக்கத்தில் உருவாகிய ‘இறைவன்’ திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். குறிப்பாக இன்று இந்த படத்தில் இடம் பெற்ற ’அழகி’ என்ற சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது என்பதும் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’தனி ஒருவன்’ திரைப்படத்திற்கு பின்னால் 8 ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த படத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் ஜோடியாக நடித்த நட்சத்திரங்கள் மீண்டும் ஜோடியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் தான் நரேன் மற்றும் விஜயலட்சுமி. கடந்த 2008 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’அஞ்சாதே’ படத்தில் நரேன் மற்றும் விஜயலட்சுமி ஜோடியாக நடித்திருந்தனர். தற்போது 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் ‘இறைவன்’ படத்தில் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரி வேதாந்த் ஒளிப்பதிவில் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.