close
Choose your channels

30 வருடங்களுக்கு பின் சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்.. அல்லு அர்ஜுன் உள்பட 4 மாஸ் நடிகர்கள் பரிசீலனை..!

Thursday, April 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

30 ஆண்டுகளுக்கு முன் வெளியாகிய சூப்பர் ஹிட் ஆன படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கும் நிலையில் அந்த படத்தில் நாயகனாக நடிக்க அல்லு அர்ஜுன், யாஷ் உட்பட நான்கு நடிகர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் நடித்த ’கல்நாயக்’ என்ற திரைப்படம் நடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் பல்ராம் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் சஞ்சய்தத் நடித்திருந்தார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது என்பதும் இந்த படத்தில் தான் 'சோலி கே பீச்சே க்யா ஹே' என்ற பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சுபாஷ் கை 30 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் இறங்கி இருக்கும் நிலையில் சஞ்சய் தத் நடித்த பல்ராம் கேரக்டரில் நடிக்க பிரபல நடிகர்களை அணுகி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அல்லு அர்ஜுன், யாஷ், ரன்பீர் கபூர் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர்களில் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ‘கல்நாயக்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.