அர்ச்சனாவை அடுத்து மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி: விறுவிறுப்பாகும் பிக்பாஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முதலில் 15 போட்டியாளர்களும் அதன்பின் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனாவும் வருகை தந்தனர் என்பது தெரிந்ததே. இவர்களில் நடிகை ரேகா கடந்த ஞாயிறு அன்று முதல் நபராக போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்
இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் உள்ள ஆஜித், பாலாஜி, அனிதா, சுரேஷ் மற்றும் ஆரி ஆகிய ஐவரில் ஒருவர் வெளியேற உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வாரமும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல பாடகியும் ரேடியோ ஆர்ஜேவுமான சுசித்ரா வருகை தர இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
ஏற்கனவே சாத்தான்குளம் விவகாரம் உள்பட பல விவகாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா, பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments