டிடியை அடுத்து சுந்தர் சி படத்தில் இணைந்த பிக்பாஸ் தமிழ் நடிகை!

சுந்தர் சி இயக்கி வரும் மூன்று நாயகன் மற்றும் மூன்று நாயகிகள் திரைப்படத்தில் நேற்று டிடி இணைந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் டிடியை அடுத்து தற்போது பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுந்தர் சி இயக்கிய ’அரண்மனை 3’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று நாயகர்களும், அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய மூன்று நாயகிகளும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அதாவது சகோதரி கேரக்டரில் விஜய் டிவி பிரபலம் டிடி என்கிற திவ்யதர்ஷினி நடித்து வருகிறார் என்ற செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சம்யுக்தா சண்முகநாதன் இணைந்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை குஷ்புவின் அவ்னிசினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தமிழ் நடிகை… வைரலாகும் புகைப்படம்!

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான “பரதேசி“ திரைப்படத்தில் உருண்டையான கண்களை வைத்துக்கொண்டு தனது

உக்ரைனில் நடக்கும் போருக்கு என்ன காரணம்? சுருக்கமான விளக்கம்!

பழைய சோவியத் ஒன்றியத்தில் ஒன்றாக இருந்த தன்னுடைய நட்பு நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுப்பதற்கு என்ன காரணம்?

மார்ச் மாத ஓடிடி படங்கள்: 'வலிமை' எந்த தேதியில் ரிலீஸ்?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தன என்பதும் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டது மட்டுமின்றி 100 சதவீத

போர் நேரத்தில் உக்ரைனுக்கு கைக்கொடுத்த எலான் மஸ்க்!

ரஷ்யா உக்ரைனில் இரணுவ நடவடிக்கையை ஆரம்பித்து 5 நாட்களை கடந்திருக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் இணைய

 மார்ச் 3ஆம் தேதி தயாராகுங்கள்: யுவன் அறிவிப்பு

மார்ச் 3ஆம் தேதி ஒரு அருமையான பாடலைக் கேட்க தயாராகுங்கள் என யுவன் சங்கர் ராஜா அறிவித்துள்ளார்.