ஜெயிலில் இருந்து தப்பித்துவிட்டேன்: சுசியின் முதல் பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சுசித்ரா வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் போஸ்ட்டாக விநாயகர் புகைப்படத்தை பதிவு செய்து என்னுடைய பாதுகாவலர் அவர்தான் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து பழைய டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ள சுசித்ரா அதன்பின் பிக்பாஸ் என்னும் ஜெயிலில் இருந்து தப்பிவிட்ட்தாக இன்னொரு போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பு சுசித்ரா பதிவு செய்த இந்த மூன்று போஸ்ட்டுகளும் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி ஆரம்பித்த நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி தான் வைல்ட் கார்டு போட்டியாளராக சுசித்ரா பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தார். முதல் வாரத்தில் போட்டியாளருக்கு நாமினேஷன் கிடையாது என்பதால் அந்த வார நாமினேஷனில் அவர் தப்பித்தார். மேலும் அடுத்த வாரம் நாமினேஷனில் சுசித்ரா சிக்கினாலும் அந்த வாரம் தீபாவளி வாரம் என்பதால் யாரும் வெளியேற்றப்படவில்லை என்பதால் அந்த வாரமும் சுசி தப்பித்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் நாமினேஷன் சிக்கிய நிலையில் முதல்முறையாக நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்ற வாரத்திலேயே அவர் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. சுசியின் வெளியேற்றத்தை அடுத்து தொலைக்காட்சி நடிகர் முகமது அஜீம் மற்றும் சுரேஷ் ஆகியோர் வைல்ட்கார்ட் போட்டியாளர்களாக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments