லாக்டவுனுக்கு பின் நடிகைகளின் சம்பளம்: நயன்தாராவுக்கு எவ்வளவு?

  • IndiaGlitz, [Thursday,November 12 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் நடைபெறாததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதனை ஈடுகட்ட மாஸ் ஹீரோக்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து வேண்டுகோள் கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தது. இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மாஸ் நடிகர்களின் சம்பள குறைப்பு குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளிவராத நிலையில் தற்போது நடிகைகளின் சம்பளம் குறித்து தயாரிப்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் முதலிடத்தில் நயன்தாரா உள்ளார்

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல்களை வெளிவந்த தகவல்களை தற்போது பார்ப்போம். இதன்படி நயன்தாராவின் சம்பளம் ரூ.4 கோடி என்றும், காஜல் அகர்வாலின் சம்பளம் ரூ.2 கோடி என்றும், த்ரிஷா, தமன்னா, எமி ஜாக்சன் ஆகியோர்களின் சம்பளம் ரூ.1.50 கோடி என்றும் ஸ்ருதிஹாசனுக்கு ரூ. 1 கோடி என்றும் கூறப்படுகிறது

கீர்த்தி சுரேஷ் 80 லட்சம் ரூபாய், அஞ்சலி 70 லட்சம் ரூபாய், ரெஜினா 60 லட்சம் ரூபாய், ஸ்ரேயா 50 லட்சம் ரூபாய் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீதிவ்யா, நிவேதா பெத்துராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா ஆனந்த் ஆகியோர்களுக்கு ரூ.40 லட்மும், நிவேதா தாமஸ், மஞ்சிமா மோகன் ஆகியோர்களின் ரூ. 35 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது

More News

தீபாவளி விருந்தாக வரும் விஜய்யின் 'மாஸ்டர்': ரசிகர்கள் உற்சாகம்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே ஏப்ரல் 9 என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

தியேட்டரில் பார்த்திருந்தால்.....: சூர்யாவுக்கு குவியும் திரையுலக பிரபலங்களின் வாழ்த்துக்கள்

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு கோலிவுட் திரையுலகினர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

வயல்வெளியில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை!!! பரபரப்பு சம்பவம்!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று வயல்வெளியில் அதுவும் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜோ பைடனின் கொள்ளு கொள்ளு தாத்தா சென்னையில் வாழ்ந்தாரா??? பரபரப்பை கிளப்பும் புது தகவல்!!!

அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் கமலா ஹாரிஸின் பெற்றோருக்கு பூர்வீகம் தமிழகம்.

காவிரி ஆற்றில் போட்டோஷூட்: இளம்ஜோடி மரணத்தில் திடுக்கிடும் தகவல்!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருமண நிச்சயம் செய்யப்பட்ட சந்துரு மற்றும் சசிகலா ஜோடி திருமணத்திற்கு முன்னர் பிரீ போட்டோஷூட் எடுக்க முடிவு செய்து முதுகளத்தூரில் உள்ள காவிரி ஆற்றுக்கு வந்து மீனவர்