நித்யா மேனனை அடுத்து தனுஷின் 'D44' படத்தில் இணைந்த இரண்டு நடிகைகள்!

தனுஷ் நடிக்க உள்ள 44வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அதுமட்டுமின்றி இன்று காலையில் இருந்து இந்த படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி தனுஷ் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிக்க உள்ளதாகவும், அதனை அடுத்து பிரகாஷ்ராஜ் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து இந்த படத்தின் நாயகிகளில் ஒருவராக நித்யா மேனன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரண்டு நடிகைகள் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாம் ஏற்கனவே கூறியபடி ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தனுஷின் ’D44' படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்க உள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

More News

பா ரஞ்சித் படத்தில் 3வது முறையாக ஹீரோவாக நடிக்கும் நடிகர்

பா ரஞ்சித்தின் இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் ஒருவர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

முதல்ல இதை நிறுத்து: யாஷிகாவுக்கு வனிதா கூறிய அறிவுரை!

சமீபத்தில் நடந்த கார் விபத்தில் தனக்கு ஏற்பட்ட காயம் குறித்தும், தனது உயிர் தோழி பவானி பலியானது குறித்தும் மிகவும் உருக்கமாக அடுத்தடுத்து இன்ஸ்டாகிராமில் நடிகை யாஷிகா பதிவு செய்துள்ளது

மனைவிக்கு கொடுமை...பெண்களுடன் கள்ளத்தொடர்பு....! பிரபல பாடகர் மீது பாய்ந்த வழக்கு...!

பிரபல பாடகரான யோ யோ ஹானி சிங் மீது அவரது மனைவி போலீசாரிடத்தில் புகாரளித்துள்ளார்.

தனுஷின் 'D44' படத்தில் இணைந்த பிரபல நடிகை: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

தனுஷ் நடிக்கவிருக்கும் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

பொன்னியின் செல்வன் லுக்கில் அசத்தும் நடிகர்கள்....! இணையத்தையே அலறவிடும் புகைப்படங்கள்...!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கும், காதாபாத்திரங்களின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகின்றன.