தமிழ் சூப்பர் ஸ்டாரை அடுத்து மலையாள சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் த்ரிஷா!

  • IndiaGlitz, [Tuesday,September 10 2019]

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா, இந்த ஆண்டு பொங்கல் அன்று வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து தனது நீண்ட நாள் ஆசையை நிறைவு செய்து கொண்டார். இந்த நிலையில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அடுத்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் அவர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மோகன்லால், மீனா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் த்ரிஷ்யம். இந்த படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் மீண்டும் மோகன்லால் நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவிருப்பதாகவும், இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷாவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ‘த்ரிஷ்யம்’ போலவே இந்த படமும் த்ரில் திரைப்படமாக இருக்கும் என கருதப்படுகிறது .

தற்போது கார்த்தி, ஜோதிகா நடித்து வரும் படம் ஒன்றை ஜித்துஜோசப் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் மோகன்லால், த்ரிஷா நடிக்கும் படத்தை இயக்குவார் என்று தெரிகிறது. இந்த படம் த்ரிஷாவின் இரண்டாவது மலையாள படம் ஆகும். இதற்கு முன் அவர் நிவின் பாலியுடன் ’ஹே ஜூடு’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

லாஸ்லியாவுக்காக சாண்டியுடன் மோதுகிறாரா கவின்?

கவின், சாண்டி இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே நெருங்கிய நண்பர்கள். ஐந்து வருடங்கள் நட்பாக இருந்ததால்தான் பிக்பாஸ் வீட்டிலும் இருவர் தலைமையில் சீக்கிரமாக ஒரு கேங் உருவானது

சென்னை வந்ததும் முகின் தாயார் பார்த்தது யாரை தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் உறவினர்களின் வருகை வாரம் என்ற நிலையில் முகினை பார்ப்பதற்காக மலேசியாவில் இருந்து அவரது தாயாரும் சகோதரியும் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். 

பிக்பாஸ் வீட்டில் செண்டிமெண்ட் ஆரம்பம்! உறவினர்கள் வருகை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் குடும்பத்தினர்களை பிரிந்து வாடும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த போட்டியாளர்களின் உறவினர்கள் சிறப்பு விருந்தினர்களாக

கவின் பேச்சால் சேரன் டென்ஷன், சுதாரிப்பாக இருக்கும் லாஸ்லியா!

கடந்த சில வாரங்களாக கவின் - லாஸ்லியா காதல் பரபரப்பாக பிக்பாஸ் வீட்டில் ஓடிக்கொண்டிருந்தபோது, கவினை தனியாக அழைத்து பேசிய சேரன், 'இப்போதைக்கு இருவரும் விளையாட்டில் கவனம்

ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை ஏற்கப்படும்: தமிழக அமைச்சர் அறிவிப்பு

ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கையை ஏற்று சென்னை எழும்பூரில் இசை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.