close
Choose your channels

சூர்யா படம் டிராப்.. 2 முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய சுதா கொங்கரா?

Wednesday, May 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருந்தால் ’புறநானூறு’ திரைப்படம் கிட்டதட்ட டிராப் ஆகிவிட்டதாக கூறப்படும் நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் இரண்டு முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான 'சூரரை போற்று’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இருவரும் இணையும் அடுத்த படம் ’புறநானூறு’ என்ற அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்தது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு கால தாமதம் ஆகி கொண்டு வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இந்த படம் டிராப் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுதா கொங்கரா தற்போது ’சூரரை போற்று’ ஹிந்தி ரீமேக் படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்ட நிலையில் அவருடைய அடுத்த படத்தில் விக்ரம் அல்லது சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அனேகமாக விக்ரமுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விக்ரம் தற்போது ’வீரதீர சூரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தில் இணைந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே விக்ரம் மற்றும் சுதா கொங்கரா அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதும் இந்த படத்திற்காக தான் என்றும் விரைவில் இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment