close
Choose your channels

'தனி ஒருவன்' மட்டுமல்ல, இன்னொரு படத்தின் 2ஆம் பாகமும் விரைவில்: மோகன் ராஜா

Tuesday, November 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவான ’தனி ஒருவன்’ திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் வெளியானது என்பதும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’தனி ஒருவன்’ மட்டுமல்ல, இன்னொரு சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்க திட்டமிட்டு இருப்பதாக மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நதியா நடிப்பில் உருவான திரைப்படம் ’எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’. கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்க திட்டமிட்டு இருப்பதாக மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் முதல் பாகத்தில் நதியா கேரக்டர் இறந்துவிடும் நிலையில் இரண்டாம் பாகத்தில் அவரை பயன்படுத்தும் வாய்ப்பு இல்லை என்றும் நதியா இல்லாமல் இரண்டாம் பாகம் உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘தனி ஒருவன்’ மற்றும் ’எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க மோகன் ராஜா திட்டமிட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment