close
Choose your channels

வனிதாவை அடுத்து மீண்டும் ஒரு வாக்-அவுட்: என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

Wednesday, March 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எவிக்ட் செய்யப்படுவார் என்பது அனைவரும் கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மட்டும் முன் எப்போதும் இல்லாத வகையில் அடுத்தடுத்து போட்டியாளர்கள் வாக்-அவுட் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

ஏற்கனவே பிக் பாஸ் சக போட்டியாளர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் தனது மனநிலையை குழப்பம் காரணமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக வனிதா விஜயகுமார் அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வனிதாவை அடுத்து தற்போது சுரேஷ் சக்கரவர்த்தியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தானாகவே வெளியேறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்து அதன்பின் வெளியேற்றப்பட்டு மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த சுரேஷ் சக்கரவர்த்தி உடல் நலம் காரணமாக வெளியேறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள வீடியோவில் கன்ஃபக்சன் அறைக்கு சுரேஷை அழைத்த பிக்பாஸ், ‘மருத்துவரிடம் அவரது உடல்நிலை குறித்து ஆலோசனை செய்ததாகவும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வெளியே அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட சுரேஷ் சக்ரவர்த்தி, ‘தனக்கு ஒரு போட்டியாளராக இது ஒரு ஏமாற்றமாக இருந்தாலும் ஒரு ரசிகராக இந்த நிகழ்ச்சியை மென்மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.