விஜய் போலவே அஜித்தும் திரையுலகில் இருந்து விலகுகிறாரா? என்ன காரணம்?

  • IndiaGlitz, [Monday,March 18 2024]

தளபதி விஜய் தற்போது 'கோட்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் ’தளபதி 69’ படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அந்த படத்தை முடித்துவிட்டு அவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால் திரையுலகில் இருந்து விலக இருப்பதாகவும் அறிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது விஜய்யை அடுத்து அஜித்தும் தற்காலிகமாக திரையுலகில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் தற்போது ’விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து அவர் ’குட் பேட் அக்லி’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களையும் முடிந்தவுடன் அஜித் உலகம் முழுவதும் பைக் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாகவும் அதனால் அவர் தற்காலிகமாக சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகின் இரண்டு மாஸ் நடிகர்களான அஜித், விஜய் ஆகிய இருவருமே திரையுலகில் இருந்து விலக இருப்பதாக வெளியான செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

More News

திருமணமான ஒரே மாதத்தில் 65 கிலோ.. வேற லெவல் வீடியோவை வைரல் செய்த 'இந்தியன் 2' நடிகை..!

'இந்தியன் 2' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 65 கிலோ எடை தூக்கி வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில்

செருப்பால் அடிப்பேன் என சொன்ன பெற்றோர்.. நொந்து நூலான இளைஞருக்கு பாலா கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

பைக் வாங்கித் தாருங்கள் என்று பெற்றோரிடம் கேட்டதற்கு செருப்பால் அடிப்பேன் என்று கூறினார்கள் என பெட்ரோல் பங்கில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்ட

'குட்நைட்' நடிகைக்கு திடீர் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரல் புகைப்படங்கள்..!

மணிகண்டன் நடித்த 'குட்நைட்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை மீதா ரகுநாத்துக்கு திருமணம் நடந்துள்ள நிலையில் திருமணம் குறித்த

தேர்தல் தேதி அறிவித்தவுடன் ஜெயம் ரவியின் முக்கிய அரசியல் பதிவு.. என்ன சொல்லியிருக்கார்?

நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது என்பதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் ஜூன் 4-ம் தேதி தான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்

'பொன் ஒன்று கண்டேன்' பிரச்சனை.. வசந்த் ரவிக்கு ஆறுதல் கூறிய பிரபல நடிகர்..!

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் வசந்த் ரவி தான் நடித்த 'பொன் ஒன்று கண்டேன்' என்ற திரைப்படம் திரைக்கு வரும் என்று தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகவும் ஆனால் திடீரென இந்த படத்தின் தயாரிப்பாளர்