யோகிபாபுவை அடுத்து நடிகர் சங்கத்திற்கு உதவிய பிரபல காமெடி நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,April 09 2020]

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு இல்லாததால் சினிமா படப்பிடிப்பை நம்பி வாழும் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பெரும் சிக்கலில் உள்ளனர். இந்த நிலையில் ஆர்கே செல்வமணி அவர்களின் முயற்சியால் பெப்சி அமைப்பில் உள்ள உறுப்பினர்களுக்கு பெரிய நடிகர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் நிதி உதவி குவிந்தது என்பதும் இந்தப் பணத்தால் பெப்சி அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் தற்போதைக்கு பசியாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பெப்சி அமைப்பின் தொழிலாளர்களைப் போலவே நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த நடிகர்களும் ஊரடங்கு உத்தரவால் கஷ்டப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கும் நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை அடுத்து யோகிபாபு, ஐசரி கணேஷ் உள்பட பலர் நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த நடிகர்களுக்கும் நிதி உதவி மற்றும் பொருளுதவி செய்து வந்தனர். இந்த நிலையில் நலிந்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகர் விவேக் அவர்கள் ரூபாய் 3.5 லட்சம் உதவி செய்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது,

மேலும் ஏற்கனவே ரூபாய் 10 லட்ச ரூபாய் நடிகர் சங்கத்திற்காக வழங்கிய ஐசரி கணேஷ் தற்போது மேலும் 500 மூட்டை அரிசி மற்றும் பருப்புகளை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மேலும் சிலரிடம் இருந்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

த்ரிஷா வெளியேறியதற்கு மணிரத்னம் தான் காரணம்: சிரஞ்சீவி

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சார்யா' என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகி இருந்தார் என்றும் அதன் பின்னர் அவர் திடீரென அந்த படத்தில் விலகிவிட்டார்

கொரோனா உணவு வகைகள்!!!

உலக வரைபடம் முழுவதும் ஆக்கிரமித்து கொடூரமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவை தற்போது சிலர் தட்டில் வைத்து அழகுபார்த்து வருகின்றனர்.

கொரோனா; அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதுகூட பிரச்சனையா???

உலகம் முழுவதும் கொரோனா சிகிச்சை பற்றிய ஆராய்ச்சிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழல்நிலையில் தற்போது “சைட்டோகைன்“ என்ற புதிய புயலை மருத்துவர்கள் கிளப்பியிருக்கின்றனர்.

நேற்றைவிட இன்று இருமடங்கான கொரோனா பாசிட்டிவ்: பீலா ராஜேஷ் தகவல்

ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து வரும் நிலையில்

கொரோனாவில் இருந்து மீண்ட மகன்: மருத்துவர்களுக்கு நன்றி கூறிய மலையாள இயக்குனர்

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த தனது மகனை குணமாக்கிய கேரள மருத்துவர்களுக்கு பிரபல மலையாள இயக்குநர் பத்மகுமார் நன்றி கூறியுள்ளார்.