திடீர் திருப்பம். ஓபிஎஸ்-இன் போர்ப் படையில் இணைந்த மதுசூதனன்.

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் முதல்வர் ஓபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்து தனது முழு ஆதரவை அளித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நத்தம் விஸ்வநாதன், பி.எச்.பாண்டியன், மைத்ரேயன் ஆகிய முக்கிய தலைவர்கள் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போது அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் ஆதரவால் ஓபிஎஸ் கை ஓங்கியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து மதுசூதனன் கூறியபோது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட அதிமுக
காப்பாற்றப்பட வேண்டும். சசிகலாவை அதிமுகவினர் நிராகரிக்க வேண்டும். ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர் பன்னீர்செல்வம். எனவே அவருக்கு எனது முழு ஆதரவை வழங்குகிறேன்' என்று கூறியுள்ளார். தனக்கு ஆதரவு கொடுத்த மதுசூதனனுக்கு முதல்வர் ஓபிஎஸ் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் வருகை தங்கள் அணிக்கு வலிமையை கூட்டியுள்ளதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்களும், ஓபிஎஸ் நடத்தி வரும் தர்ம யுத்தத்திற்கு மதுசூதனன் அவர்கள் ஆதரவு அளித்தது மகிழ்ச்சி அளிப்பதாக பி.ஹெச்.பாண்டியன் அவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

More News

ஓபிஎஸ்-ஐ சந்தித்த ஜெயலலிதாவின் உயிர்த்தோழி

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழியும், தமிழ்நாடு இசை பல்கலைக்கழக துணைவேந்தருமான வீணை காயத்ரி சற்று முன் சந்தித்து பேசினார்

சசிகலா நடவடிக்கைக்க்கு எதிர்ப்பு. கூண்டோடு ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகிகள்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அணி, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அணி என இரண்டு அணிகளாக அதிமுக தற்போது செயல்பட்டு வருகிறது. யார் ஆட்சியை பிடிப்பது என்ற பரபரப்பு தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒம்சக்தி சேகர் அதிமுகவின் அட&#

ஜெயலலிதா நினைவு இல்லம் ஆகிறது 'வேதா இல்லம்'. விரைவில் அறிவிப்பு?

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாகவே பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன், அதிமுக வங்கிக்கணக்கு முடக்கம் ஆகியவை எதிர்த்தரப்பினர் கூட எதிராபாத அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது...

மும்பையில் இருந்து கிளம்பினார் ஆளுனர். சென்னை விமான நிலையத்தில் முதல்வருடன் சந்திப்பா?

தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னைக்கு சற்று முன்னர் கிளம்பினார். அவர் இன்று பிற்பகல் 3மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

ஓபிஎஸ்-க்கு எதிராக போயஸ் கார்டனில் ஆர்ப்பாட்டம். உருவ பொம்மை எரிக்க முயற்சி

சென்னை மெரீனாவில் தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தனது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்திய வினாடியில் இருந்து தமிழக அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது. ஆட்சியை பிடிக்க சசிகலா தலைமையில் ஒரு அணியும், முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் தீவிர முயற்சியில் உள்ளனர்...