மகள் பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடும் மணிரத்னம் பட நடிகை!

 

இந்தியச் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்துவரும் நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய செல்ல மகளின் 10 ஆவது பிறந்த நாளை நேற்று மாலத்தீவில் கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கிறது.

முன்னாள் உலகஅழகியான நடிகை ஐஸ்வர்யா ராய், இயக்குநர் மணிரத்னம் இயக்கிய “இருவர்“ திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதையடுத்து பாலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த இவர் தனது நடிப்பு மற்றும் அழகால் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் தனது அறிமுக இயக்குநர் மணிரத்னத்தின் “ராவணன்“ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அவர் தற்போது மீண்டும் “பொன்னியின் செல்வன்“ படத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஜோடி தங்களது மகள் ஆராத்யாவின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் இணைந்து Kuch Naa Kaho, Umrao Jaan, Dhoom 2, Dhaai Akshar Prem ke, Sarkar Raj, Raavan, Guru, Bunty Aur Babli போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கடந்த 2007 ஏப்ரல் 20 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு 2011 நவம்பர் 16 ஆம் தேதி ஆராத்யா பிறந்தார்.

தற்போது மாலத்தீவு சென்றுள்ள நடிகை ஐஸ்வர்யா – அபிஷேக் பச்சன் இருவரும் தங்களது மகள் ஆராத்யாவின் 10 ஆவது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். மேலும் இந்த கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஆராதியாவிற்கு வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.

More News

மலை முகட்டில் திருமண நாளை கொண்டாடிய நட்சத்திர தம்பதி… வைரல் புகைப்படம்!

பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான ரன்வீர் சிங்- தீபிகா படுகோனே இருவரும் தங்களது மூன்றாம் ஆண்டு திருமண விழாவை

திருப்பூரில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்பூர் மாவடத்தில் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து

அபிஷேக்கின் வைல்ட்-கார்ட் எண்ட்ரி எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 45 நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதும்

கண்ணாடி டாஸ்க்கில் மனம் திறந்த ராஜூ: சிரித்து சிரித்து மழுப்பிய பிரியங்கா!

பிரியங்காவின் நரித்தனத்தை கண்ணாடி டாஸ்க் மூலம் ராஜு காமெடியாக கூறியதை சிரித்து சிரித்து மழுப்பிய பிரியங்காவின் காட்சிகள் இன்றைய மூன்றாவது புரமோவில் உள்ளன.

'பாகுபலி 2' விநியோகிஸ்தருடன் கைகோர்க்கும் 'மாநாடு' தயாரிப்பாளர்!

'பாகுபலி 2' திரைப்படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்த நிறுவனத்துடன் 'மாநாடு' தயாரிப்பாளர் கைகோர்த்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது