பொன்னியின் செல்வனை அடுத்து மேலும் ஒரு தென்னிந்திய படத்தில் ஐஸ்வர்யாராய்?

  • IndiaGlitz, [Saturday,July 13 2019]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள மல்டி ஸ்டார் திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய கேரக்டரான 'நந்தினி' கேரக்டரில் நடிகை ஐஸ்வர்யாராய் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் மேலும் ஒரு தென்னிந்திய படத்தில் நடிக்க ஐஸ்வர்யாராயிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் 'சயிர நரசிம்மரெட்டி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த படத்தை கொரட்டலா சிவா இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர். சிரஞ்சீவியின் வயதுக்கேற்ற வகையில் நாயகி இருக்க வேண்டும் என்பதிலும் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யாராயிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி உண்மையானால் ஒரே நேரத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் சிரஞ்சீவி படம் இரண்டு பெரிய பட்ஜெட் தென்னிந்திய படங்களில் ஐஸ்வர்யாராய் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

முதல்முறையாக நடிகராக மாறும் நடிகர் மகத்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓரிரண்டு படங்களில் நடித்து வரும் நடிகர் மகத், தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் ராஜேஷ் கண்ணா

கனிமொழியிடம் நடிகை கஸ்தூரி எழுப்பிய கேள்வி

கடந்த சில ஆண்டுகளாகவே மாடுகளை வைத்து அரசியல் செய்யும் நிலைமை நாடு முழுவதும் இருந்து வருகிறது.

தர்ஷனுக்கு மறைமுக ஆதரவு கொடுத்த லாஸ்லியா!

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை முதல்முறையாக எதிர்த்து பேசிய தர்ஷனுக்கு வனிதாவின் குரூப்பில் இருந்தே ஆதரவு கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க படுக்கைக்கு அழைத்தார்கள்: தொகுப்பாளினியின் அதிர்ச்சி குற்றச்சாட்டு

திரைப்படங்களில் வாய்ப்பு கேட்க செல்லும்போது தங்களை இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக பல நடிகைகள் குற்றஞ்சாட்டியுள்ளது அனைவரும் அறிந்ததே

'அருந்ததி 2' படத்தில் அனுஷ்கா இல்லையா?

நடிகை அனுஷ்கா தமிழில் 'ரெண்டு' என்ற படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், அவருக்கு தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் புகழ் பெற காரணமாக இருந்த படம் 'அருந்ததி'.