close
Choose your channels

பொன்னியின் செல்வனை அடுத்து மேலும் ஒரு தென்னிந்திய படத்தில் ஐஸ்வர்யாராய்?

Saturday, July 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள மல்டி ஸ்டார் திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய கேரக்டரான 'நந்தினி' கேரக்டரில் நடிகை ஐஸ்வர்யாராய் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் மேலும் ஒரு தென்னிந்திய படத்தில் நடிக்க ஐஸ்வர்யாராயிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் 'சயிர நரசிம்மரெட்டி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த படத்தை கொரட்டலா சிவா இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர். சிரஞ்சீவியின் வயதுக்கேற்ற வகையில் நாயகி இருக்க வேண்டும் என்பதிலும் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யாராயிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி உண்மையானால் ஒரே நேரத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் சிரஞ்சீவி படம் இரண்டு பெரிய பட்ஜெட் தென்னிந்திய படங்களில் ஐஸ்வர்யாராய் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.