தனுஷின் பிரிவிற்கு பின் ஐஸ்வர்யாவின் முதல் வேலை இதுதான்: வைரல் புகைப்படம்!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 18 ஆண்டுகளாக திருமண பந்தத்தில் இருந்த நிலையில் திடீரென இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

இந்த நிலையில் தனுஷின் பிரிவிற்கு பின் ஐஸ்வர்யா செய்த முதல் வேலை என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் ஐஸ்வர்யா தன்னுடைய அடுத்த பணிகளில் தீவிரமாக உள்ளார்.

ஏற்கனவே ‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தற்போது ஒரு மியூசிக் ஆல்பத்தை இயக்க இருப்பதாகவும் இந்த ஆல்பம் குறித்த ஆலோசனையில் தயாரிப்பு நிறுவனத்துடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டம் குறித்த புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஆல்பத்தில் நடிப்பவர்கள், இசை அமைப்பவர்கள் குறித்த ஆலோசனை செய்யப்பட்டதாகவும் விரைவில் இந்த மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் தற்போது ’வாத்தி’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தனுஷூம் ஹைதராபாத்தில் தான் உள்ளார் என்பதும் தனுஷ், ஐஸ்வர்யா ஆகிய இருவருமே ஒரே ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

More News

42 வருடங்களுக்கு பின் சென்னை தியேட்டருக்கு சென்ற கமல்ஹாசன்: தியேட்டர் உரிமையாளர் டுவிட்!

சென்னையில் உள்ள தங்கள் திரையரங்குக்கு 42 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் வந்துள்ளது தங்களுக்கு பெருமையாக இருப்பதாக அந்த திரையரங்கின் உரிமையாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

Spam மெயிலை பார்த்த பெண்ணிற்கு ஜாக்பாட்… 30 லட்சத்தைக் குவித்த அதிர்ஷ்டம்!

அமெரிக்காவில் வசித்துவரும் பெண் ஒருவர் தன்னுடைய காணாமல்

செல்ல மகளின் பிறந்தநாள்… கவிதை எழுதி அசத்திய பிரபல தமிழ் நடிகரின் பதிவு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் பிரசன்னா

சீயான் விக்ரமின் 'மஹான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு?

சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து நடித்த 'மஹான்' திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் என்பதும் இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் தெரிந்ததே

தாயார் ஷோபாவை சந்தித்தாரா தளபதி விஜய்: வைரலாகும் புகைப்படம்!

 தளபதி விஜய் கடந்த சில வருடங்களாக பெற்றோரிடம் கருத்து வேறுபாடு உடன் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் தனது தாயார் ஷோபாவை சந்தித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.