நயன்தாரா நாயகனின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா

  • IndiaGlitz, [Monday,December 03 2018]

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட ஐஸ்வர்யா தத்தாவுக்கு கடந்த சில வாரத்தில் ஒருசில திரைப்படங்கள் ஒப்பந்தமாகி வருவது தெரிந்ததே. மகத் நடிக்கும் ரொமான்ஸ் படம் ஒன்றில் நடிக்க அவர் சமீபத்தில் ஒப்பந்தமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நயன்தாரா நடித்த 'மாயா' படத்தின் நாயகனான ஆரி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கவுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் இந்த படத்தின் பூஜை இன்று காலை சென்னை முகபேரிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், அதனையடுத்து இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

காதலே காதலுக்கு தடையாக உள்ளது என்ற கருத்தை வலியுறுத்தும் இந்த படத்தில் கடந்து போன காதலையும் இன்று நடந்து கொண்டிருக்கும் காதலையும் பார்க்கலாம் என்றும் இந்த படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமித்ரன் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே 'அய்யனார்' என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. A.G.மகேஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கிரியேட்டிவ் டீம்ஸ் E.R.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் B. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

 

More News

நாசர் மகனை நெகிழ்ச்சி அடைய செய்த விஜய்

நடிகர் சங்க தலைவர் நாசரின் மகன் பைசல் கடந்த 2014ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்து மறுபிறவி எடுத்து பிழைத்தார்

சென்னை திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் தமிழ் படங்கள்

கடந்த 15 ஆண்டுகளாக சென்னையில் சர்வதேச சென்னை திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் 16வது விழா வரும் 3ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது

போராட்டம் நடத்தி திரும்பி வந்த விவசாயிகளை வரவேற்ற ஒரே அரசியல் தலைவர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நேற்று தமிழக விவசாயிகள் உள்பட இந்தியாவின் அனைத்து பகுதியில் உள்ள விவசாயிகளும் போராட்டம் செய்தனர்.

மத்திய அரசை விமர்சிக்க கமலுக்கு தகுதி இருக்கின்றதா? எச்.ராஜா

சமீபத்தில் டெல்டா பகுதியை தாக்கிய கஜா புயலை விட அதனால் ஏற்பட்ட அரசியல் புயலின் தாக்கம் அதிகமாகி உள்ளது. அரசியல்வாதிகள் கடந்த இரண்டு வாரங்களாக கஜா புயலை வைத்து அரசியல் செய்வதோடு,

ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற கலைஞர்

ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ரஜினியின் அடுத்த படமான 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ளது.