close
Choose your channels

நயன்தாரா நாயகனின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா

Monday, December 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட ஐஸ்வர்யா தத்தாவுக்கு கடந்த சில வாரத்தில் ஒருசில திரைப்படங்கள் ஒப்பந்தமாகி வருவது தெரிந்ததே. மகத் நடிக்கும் ரொமான்ஸ் படம் ஒன்றில் நடிக்க அவர் சமீபத்தில் ஒப்பந்தமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நயன்தாரா நடித்த 'மாயா' படத்தின் நாயகனான ஆரி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கவுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் இந்த படத்தின் பூஜை இன்று காலை சென்னை முகபேரிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், அதனையடுத்து இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

காதலே காதலுக்கு தடையாக உள்ளது என்ற கருத்தை வலியுறுத்தும் இந்த படத்தில் கடந்து போன காதலையும் இன்று நடந்து கொண்டிருக்கும் காதலையும் பார்க்கலாம் என்றும் இந்த படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமித்ரன் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே 'அய்யனார்' என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. A.G.மகேஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கிரியேட்டிவ் டீம்ஸ் E.R.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் B. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.