விஜய்யின் 'கோட்' அடுத்த அப்டேட்.. ஐஸ்வர்யா கல்பாத்தி பகிர்ந்த அசத்தல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Friday,April 12 2024]

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. விஜய் உட்பட படக்குழுவினர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இத்துடன் ‘கோட்’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ரம்ஜான் பண்டிகை தினத்தில் ‘கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்த நிலையில் தற்போது அடுத்த அப்டேட் இன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா கல்பாத்தி வெங்கட் பிரபுவுடன் ரஷ்யாவில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ’அடுத்த அப்டேட் என்ன திட்டம்? என்ற கேள்விக்குறியை கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இதில் இருந்து ‘கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்றும் அநேகமாக ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் சிங்கிள் பாடல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய்யின் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளதை அடுத்து இந்த படத்தின் சிங்கிள் பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

மீண்டும் திரைக்கு வரும் நாகேஷ் பேரன்.. அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

தமிழ் திரை உலகின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ், மீண்டும் ஒரு படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.

ஆன்மீக பேச்சாளர் விஜய்குமார்:திருக்கடையூர் அபிராமி அம்மன், அபிராமி பட்டர் கதை மற்றும் அம்மன் வழிபாடு பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்.

ஆன்மீக பேச்சாளர் விஜய்குமார்: தமிழ்நாட்டில் இறைவனை கண்டவர்களின் ரகசியங்கள்! திருக்கடையூர் அபிராமி அம்மன், அபிராமி பட்டர் கதை மற்றும் அம்மன் வழிபாடு பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்.

ரூ.100 கோடி வசூல் செய்தும் அவமரியாதை.. அனுபமாவை மேடையில் இருந்து இறங்க சொன்ன ரசிகர்கள்..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்த திரைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்த நிலையில் அவர் சமீபத்தில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் அவரை

இளவரசிக்கு கேன்சரா ?கேட் மிடில்டன் வெளியிட்ட உண்மைகள்.

என்னை போன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி நான் சிந்தித்து பார்க்கிறேன்.நான் எல்லோருக்கும் சொல்ல விரும்புவது தன்னம்பிகையயை இழக்காதீர்கள்.நீங்கள் தனியாக இல்லை.நம்பிக்கையோடு முன் செல்லுங்கள்...

22 வருடம் கழித்து சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகமா? நடிகர் விக்ரம் மாஸ் அறிவிப்பு..!

நடிகர் சியான் விக்ரம் தனது சமூக வலைதளத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிவிப்பு அவர் 22 ஆண்டுகளுக்கு முன் நடித்த சூப்பர் ஹிட் படத்தின்