close
Choose your channels

விஜய்யின் 'கோட்' அடுத்த அப்டேட்.. ஐஸ்வர்யா கல்பாத்தி பகிர்ந்த அசத்தல் புகைப்படம்..!

Friday, April 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. விஜய் உட்பட படக்குழுவினர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இத்துடன் ‘கோட்’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ரம்ஜான் பண்டிகை தினத்தில் ‘கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்த நிலையில் தற்போது அடுத்த அப்டேட் இன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா கல்பாத்தி வெங்கட் பிரபுவுடன் ரஷ்யாவில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ’அடுத்த அப்டேட் என்ன திட்டம்? என்ற கேள்விக்குறியை கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இதில் இருந்து ‘கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்றும் அநேகமாக ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் சிங்கிள் பாடல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய்யின் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளதை அடுத்து இந்த படத்தின் சிங்கிள் பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.