மகளிர் தினத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் கோபமான பதிவு.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Friday,March 08 2024]

இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் கோபமான ஆவேசமான ஒரு பதிவு செய்துள்ளார்.

அவர் தனது பதிவில் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளோடு புதுவையில் சிறுமிக்கு நடந்த கொடூரம் குறித்து குறிப்பிட்டு அனைத்து பெண்களும் சிவபெருமானிடம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும், இனி எந்த ஒரு பெண்ணுக்கும் எந்த ஒரு பெண் குழந்தைக்கும் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் மனித ரூபத்தில் உலாவும் பிசாசுகள் கையில் பெண்கள் சிக்கி இனிமேல் சின்னாபின்னமாக கூடாது என்று கோபத்துடன் பதிவு செய்துள்ளார். மேலும் இது போன்ற கேடுகெட்ட மனிதர்களை கடவுள் தண்டிப்பார், ஒருவேளை அனைத்து சட்டம் மற்றும் கடவுள் அவர்களுக்கான தண்டனை கிடைக்காத பட்சத்தில் அந்த பெண் குழந்தைக்காக நம்முடைய கண்ணீர் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் புதுவையில் பலியான பெண் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய அவர் பிரார்த்தனை செய்வதாகவும் இந்த விஷயத்தை கேட்டபோது தன்னுடைய இதயம் நடுங்கிதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More News

வயசு ஆக ஆக.. உலக மகளிர் தினத்தில் நயனை வர்ணித்த  விக்னேஷ் சிவன்..!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது

பிரபாஸின் 'கல்கி 2898AD'.. விஜய் பட டைட்டில் தான் பிரபாஸ் கேரக்டர்..!

பிரபாஸ் நடித்து வரும் 'கல்கி 2898AD' என்ற படத்தின் பிரபாஸ் கேரக்டர் இன்று மாலை வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்த்தி - நலன் குமாரசாமி படத்தின் சூப்பர் வீடியோவை வெளியிட்ட படக்குழு.. முக்கிய அறிவிப்பு..!

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் இந்த

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஜித்.. எடப்பாடி பழனிசாமி சொன்னது என்ன தெரியுமா?

நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது 'ஹார்ட் பீட்' சீரிஸ்  !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'ஹார்ட் பீட்' சீரிஸை, தற்போது ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கியுள்ளது.