பாடை கட்டிய அஜித்-விஜய் ரசிகர்கள்: டுவிட்டர் இணையதளத்தில் பரபரப்பு 

  • IndiaGlitz, [Monday,July 29 2019]

அஜித்-விஜய் ரசிகர்கள் டுவிட்டர் இணையதளத்தில் மோதிக் கொள்வது என்பது தினமும் நடைபெறும் ஒரு வழக்கமான செயல் என்பது டுவிட்டரை தினமும் கவனித்து வரும் நபர்களுக்கு தெரிந்ததே

இந்த நிலையில் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வெளியாகும் ஆகஸ்ட் 8ஆம் தேதியை குறிப்பிட்டு #ஆகஸ்ட்8_பாடைகட்டு என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்டுக்கு கொண்டு வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அஜித் ரசிகர்கள் #RIPactorVIJAY என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதனை டிரெண்டுக்கு கொண்டு வந்தனர்

இரண்டு ஹேஷ்டேக்குகளும் மாறி மாறி டிரெண்ட் ஆகி வந்த நிலையில் திடீர் திருப்பமாக விஜய் ரசிகர்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர். இதனை அடுத்து மனம் மாறிய அஜித் ரசிகர்கள் தற்போது #LongLiveVijay என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். ஒரே நேரத்தில் டுவிட்டரில் இந்த இரண்டு நாட்களும் டிரெண்டில் இருந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டுவிட்டர் சமூக வலைத்தளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அஜித், விஜய் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதை தவிர்த்து, இரு தரப்பின்கர்களும் சமூக பிரச்சனைகளுக்கு ஒருங்கிணைந்து குரல் கொடுத்தால் அதன் தாக்கம் ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது

More News

வைல்ட் கார்டு எண்ட்ரி ஆகும் திருநங்கை: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

'பிக்பாஸ் 3' தமிழ் நிகழ்ச்சி கடந்த ஐந்து வாரங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து பாத்திமாபாபு, வனிதா, மோகன் வைத்யா மற்றும் மீராமிதுன் ஆகிய

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கேட்ட ஐசரிகணேஷிடம் நீதிபதிகள் விடுத்த வேண்டுகோள்

பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று முடித்து வைத்த நீதிபதிகள், ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக நன்கொடையாளர்

பிரதமருக்கு எதிராக 49 பேர் கையெழுத்து: மணிரத்னம் கையெழுத்திட்டாரா?

கட்ந்த சில நாட்களுக்கு முன் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதத்தை தங்கள் கையெழுத்திட்டு அனுப்பி வைத்ததாகவும்,

கவினை ஓப்பனாக நாமினேட் செய்யும் சாக்சி: தீராத பிரச்சனை

பிக்பாஸ் வீட்டின் காதலர்கள் என்று கூறப்பட்டு வந்த கவின் -சாக்சி ஜோடி மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை, கடந்த சில நாட்களாக இருவரும் முட்டி மோதி வருகின்றனர்.

உலகின் முதல் புராண 3D படத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு!

'மை டியர் குட்டிசாத்தான்' திரைப்படம் தமிழில் முதல் 3டி தொழில்நுட்பத்தில் வெளிவந்த திரைப்படம் என்றாலும் இதுவரை தமிழ் உள்பட எந்த மொழியிலும் 3டி தொழில்நுட்பத்தில் புராண திரைப்படங்கள் வெளி வந்தது இல்லை