close
Choose your channels

பிரதமருக்கு எதிராக 49 பேர் கையெழுத்து: மணிரத்னம் கையெழுத்திட்டாரா?

Monday, July 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதத்தை தங்கள் கையெழுத்திட்டு அனுப்பி வைத்ததாகவும், அந்த கடிதத்தில் ஜெய் ஸ்ரீராம் என்பதை ஆயுதமாக்கி, போர் முழக்கமிட்டு, சிறுபான்மையினர்களை சிலர் தாக்கி வருவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த கடிதத்திற்கு 62 பிரபலங்கள் பதில் கடிதம் எழுதி பிரதமருக்கு அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எழுதப்பட்ட 49 பேர் கையெழுத்திட்ட கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்திடவில்லை என்று அவரது தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். மணிரத்னம் கையெழுத்து இல்லாமல் அந்த கடிதம் அனுப்பப்பட்டதா? அல்லது அவரது கையெழுத்தை வேறு யாரேனும் போட்டார்களா? என்பது குறித்த கேள்வி தற்போது எழுந்துள்ளது.

49 பேர் கையெழுத்திட்டதாக கூறப்படும் அந்த கடிதத்தில் அனுராக் காஷ்யப், அபர்ணாசென் உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் கையெழுத்திட்டிருந்தார்கள் என்பதும், இந்த கடிதத்திற்கான பதிலடி கடிதத்தில் கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கையெழுத்திட்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.