close
Choose your channels

ரசிகர்களுக்காக பல வருட கொள்கையை மாற்றி கொண்ட அஜித்: அப்படி என்ன செய்தார்?

Wednesday, April 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் தான் நீண்ட வருடங்களாக கடைபிடித்துவரும் ஒரு கொள்கையை தனது ரசிகர்களுக்காக மாற்றி அமைத்து கொண்டதாக செய்திகள் வெளியாகிஉள்ளது.

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் ஒரு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்திற்கான கதையை கேட்டு முடிவு செய்வார் என்பது பல வருடங்களாக அவர் கடைபிடித்துவரும் கொள்கையாக உள்ளது.

இந்த நிலையில் ’அஜீத் 61’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ’அஜித் 62’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்பதும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ‘அஜித் 63’ மற்றும் ’அஜித் 64’ படங்கள் குறித்த முடிவையும் அவர் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. அஜித்தின் 63வது படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். ’வீரம்’, ’வேதாளம்’, ’விவேகம்’ மற்றும் ’விஸ்வாசம்’ ஆகிய நான்கு படங்களை அடுத்து ஐந்தாவது முறையாக சிறுத்தை சிவாவுடன் இணையவுள்ளார்.

இதனை அடுத்து அஜித்தின் 64வது படத்தை ’8 தோட்டாக்கள்’ இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்க இருப்பதாகவும் இது ஒரு மதுரை கேங்ஸ்டர் ஒருவரின் கதை என்றும் இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித்தின் அடுத்தடுத்த படங்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதால் அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.