நேற்று சமத்துப் பொண்ணு… ஆனால் இன்று… வைரலாகும் ஆலியா பட்டின் க்யூட் புகைப்படம்!

  • IndiaGlitz, [Saturday,June 05 2021]

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட் நேற்று தனது சிறு வயது புகைப்படம் ஒன்றை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த புகைப்படத்தில் ஆலியா சமத்துப் பெண்ணாக பீச்சில் அமர்ந்து இருந்தார். இதனால் ஆலியா பட்டின் குழந்தை வயது போட்டோவிற்கு நெட்டிசன்கள் பலரும் “இவ்ளோ க்யூட்டா” என வியப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

ஆனால் இன்று அவர் வெளியிட்டு உள்ள புகைப்படம் ஒன்றில் சிறிய குழந்தையாக இருக்கும் ஆலியா பட் பாதுகாப்பு உடையோடு நீச்சல் குளத்தில் கெத்து காட்டுகிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த ஒரு புகைப்படத்திற்கு மட்டும் 1 கோடி 41 லசட்த்தைத் தாண்டி லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இவர் நடித்த “கங்குபாய் கத்தியவாடி” திரைப்படம் வரும் ஜுலை 30 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அதோடு எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படைப்பான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் ஆலியா பட் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஆலியா பட், அவரது காதலர் நடிகர் ரன்பீர் கபூரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவு சென்று இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தான் தனது சிறுவயது புகைப்படத்துடன் மேட்ச் செய்து தற்போது தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். அந்தப் புகைப்படங்களும் வீடியோக்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கின்றன.

More News

தமிழகத்தில் ஜூன்14 வரை ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகள் உண்டா?

தமிழகத்தில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு வரும் 7ம் தேதியுடன் முடிவடைவதை அடைத்து 7ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு

பெண்கள் எப்படி இருக்கனும் தெரியுமா? “தளபதி 65“ பட நாயகியின் அசத்தல் விளக்கம்!

கொரோனாவிற்கு இடையில் சினிமா பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

ரஷித்கானுக்கு பிடித்தது இந்த விஜய் பட பாடலா? ஆச்சரிய தகவல்!

பிரபல ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித்கான் தனக்கு பிடித்த தமிழ் பாடல் என விஜய் படத்தின் பாடல் ஒன்றை குறிப்பிட்டுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர் 

எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் ஆலோசனை செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்: என்ன காரணம்?

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு ரத்து என சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து உத்தரப்பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தன.

ஊரடங்கு தொடருமா? முதல்வர் இன்று அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றதும் மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது