close
Choose your channels

5 வருடமாக நடத்தப்பட்ட சூட்டிங்… பிரம்மாண்ட திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட்!

Tuesday, March 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட்டில் பிக்-பி என அழைக்கப்படும் நடிகர் அமிதாப்பச்சன், தெலுங்கு ஸ்டார் நடிகர் நாகார்ஜுனா மற்றும் ரியல் காதல் ஜோடிகளான ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோர் இணைந்து நடித்துவந்த “பிரம்மாஸ்திரா“ திரைப்படத்தின் படப்பிடிப்பு 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நிறைவடைந்து இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஃபாக்ஸ் ஸ்டார் மற்றும் கரண் ஜோஹர் இணைந்து தயாரித்துள்ள பிரம்மாண்ட திரைப்படம் “பிரம்மாஸ்திரா“. 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. 3 பாகமாக வரவுள்ள இந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில் அதன் முதல் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் படப்பிடிப்பு நிறைவடையாத நிலையில் அதற்கான வெளியீட்டுத் தேதியும் தள்ளிப்போனது. இந்நிலையில் 5 வருடங்களாக நடைபெற்ற முதல் பாகத்தின் படப்பிடிப்பு நேற்று காசியில் நிறைவடைந்துவிட்டதாக இயக்குநர் அயன் முகர்ஜி மற்றும் அந்தப் படத்தின் ஹீரோயின் ஆலியா பட் ஆகியோர் தங்களது சமூகவலைத் தளங்களில் அறிவித்துள்ளனர். இதையடுத்து “பிரம்மாஸ்திரா“ திரைப்படம் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிஜத்தில் காதல் ஜோடிகளான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட் இருவரும் தாங்கள் ஒன்றாக இணைந்து நடித்திருக்கும் “பிரம்மாஸ்திரா“ திரைப்படம் குறித்து ஏற்கனவே உற்சாகத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் வரும் செப்டம்பரில் இந்தத் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இதனால் இந்தப் படத்தின் நிறைவு குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.