அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் தான்: அனிருத்

  • IndiaGlitz, [Saturday,December 07 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் இசையமைப்பாளர் அனிருத் பேசியதாவது:

தலைவர் படத்துக்கு மியூசிக் என்பது எனது வாழ்நாள் கனவு. அது இரண்டாவது முறை நடந்துள்ளது. என்னை நம்மிய இயக்குநர்களுக்கு நன்றி.

நான் ‘3’ படத்திற்கு பின்னர் சின்ன படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருந்த போது எனக்கு ’கத்தி’ என்ற மிகப்பெரிய படத்தை கொடுத்து எனக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள். அவருக்கு எனது நன்றிகள். தற்போது தலைவர் அவர்களின் படத்திற்கு இசையமைக்க எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். எனவே மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

தர்பார் படத்தின் ஆல்பம் மிக சிறப்பாக வந்ததற்கு முக்கிய காரணம் பாடலாசிரியர் விவேக். சும்மா கிழி’ பாடல் உள்பட அனைத்து பாடல்களையும் அவர் சிறப்பாக எழுதியுள்ளார். அவருக்கும் எனது நன்றிகள் ஒவ்வொரு பாடலையும் நாங்கள் ரசித்து ரசித்து நாங்கள் ஒலிப்பதிவு செய்தோம். ஒலிப்பதிவு செய்து முடித்தவுடன் எங்களையும் அறியாமல் எங்கள் கண்களில் ஒரு ஆனந்த கண்ணீரை நாங்கள் பார்த்தோம். இந்த உணர்வு ஏன் வந்தது என்றால் உலகத்திலேயே ஒரு மிகச் சிறந்த நடிகருக்கு நாமும் பாடல் கம்போஸ் செய்து இருக்கிறோம் என்ற உணர்வு தான்

இந்த பொங்கல் அனைவருக்கும் ட்ரீட் ஆக நிச்சயம் இருக்கும். கடைசியாக அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் தான்’ என்று கூறினார்.

More News

சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கு மட்டுமே: விவேக்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் நடிகர் விவேக் பேசியதாவது:

“எம்.ஜி.ஆர்- க்கு பிறகு ரஜினிதான்: 'தர்பார்' இசைவிழாவில் ஏ.ஆர்.முருகதாஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,

ரஜினி அவர்கள் இரண்டு வார்த்தை பேசினால் அதுதான் இன்றைக்கு செய்தி: ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் நடிகரும் இயக்குனரும்

ஒரு பாஸ்போர்ட் தான், நான் இந்தியனா இல்லையா என்பதை முடிவு செய்யுமா..?அக்ஷய் குமார்.

சமீபத்தில் நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் அக்‌ஷய் குமார் ஓட்டுப்போடவில்லை. இதற்கு அவரிடம் இருக்கும் கனடா நாட்டுக்கான பாஸ்போர்ட்டே காரணம்

தமிழகத்தில் ஆபாச படம் பார்த்த 3000 பேர் லிஸ்ட் தயார்: விரைவில் விசாரணை

உலகிலேயே அதிகமாக ஆபாசப்படம் பார்ப்பவர்கள் இந்தியர்கள் தான் என்று சமீபத்தில் அமெரிக்க நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.