close
Choose your channels

'புஷ்பா' புரமோஷன் விழாவில் தள்ளுமுள்ளு: ரசிகர்கள் காயமானது குறித்து அல்லு அர்ஜூன்!

Tuesday, December 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ என்ற திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனின் ஒருபகுதியாக நாகார்ஜுனாவுக்கு சொந்தமான மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்க நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் அல்லு அர்ஜுனை காண ஏராளமான ரசிகர்கள் வந்ததை அடுத்து அங்கு சலசலப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் ஒரு சில ரசிகர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’புஷ்பா’ புரமோஷன் விழாவை ரத்து செய்துவிட்டு அல்லு அர்ஜுன் வீடு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து அல்லு அர்ஜுன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

இன்று நடந்த நிகழ்ச்சியில் எனது ரசிகர்கள் காயம் அடைந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து அறிந்தேன். எனது குழுவினர் தனிப்பட்ட முறையில் நிலைமையைக் கண்காணித்து, என்னிடம் தகவல் தெரிவித்து வருகின்றனர். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நான் மிகவும் கவனமாக இருப்பேன். உங்கள் அன்பும் அபிமானமும் எனது மிகப் பெரிய சொத்து, அவற்றை நான் ஒருபோதும் இழக்கப்போவதில்லை’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.