close
Choose your channels

ஆன்லைன் பரிதாபங்கள்… ரஸ்க் என நினைத்து வரட்டியை சாப்பிட்ட கொடுமை!

Friday, January 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

Amazon ஆன்லைன் விற்பனைத் தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள வரட்டியை (உலர்த்தப்பட்ட மாட்டுச் சாணத்துண்டு) ஒருவர் ருசிப்பார்த்து அதைக் குறித்து கருத்தும் பதிவிட்டு உள்ளார். இந்நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் மாட்டு சாணத்தை உலர்த்தி அதை கிராமங்களில் நெருப்பு மூட்ட பயன்படுத்துவர். இந்துக் கலாச்சாரத்தில் பசு மாட்டிற்கு உயரிய இடம் கொடுக்கப் படுவதால் உலர்த்தப் பட்ட மாட்டுச் சாணம் பூஜை நேரங்களில் பயன்படுத்தப் படுகிறது.

இந்நிலையில் ஆன்லைனில் காசு கொடுத்து வாங்கிய மாட்டுச் சாணத்தை ஒரு பயனாளி சாப்பிட்டுவிட்டு ருசி நன்றாக இருக்கிறது. ஆனால் இது குப்பையும் கூளமுமாக இருக்கிறது. அதோடு எனக்கு பார்சல் வருவதற்கு முன்பே யாரோ பிரித்து விட்டார்கள் எனக் குற்றம் சாட்டியதோடு அடுத்த முறை தயாரிக்கும்போது சுகாதாரமான முறையில் தயார் செய்யவும் எனவும் கமெண்ட் பதிவிட்டு உள்ளார். இதை அந்த நபர் தெரிந்து தான் செய்தாரா? அல்லது தெரியாமல் இப்படி செய்தாரா என்பதில் பெருத்த குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

காரணம் அமேசான் பக்கத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள வரட்டியில் ஹோமம் வளர்த்தல், பூஜை செய்தல் உள்ளிட்ட மத விவகாரங்களக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடியது எனத் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இதனால் அந்த நபர் வேண்டுமென்றே இப்படி பதிவிட்டு இருக்கலாமா? அல்லது பக்தி மார்க்கத்தில் உண்மையிலேயே அவர் சாப்பிட்டு விட்டாரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இந்த காமெடியை பார்த்த சஞ்சய் அரோரா என்பவர் அமேசான் பக்கத்தை ஸ்கீரின் ஷாட் எடுத்து, “இதுதான் இந்தியா… நான் இந்தியாவை நேசிக்கிறேன்” என நகைச்சுவையாக பதிவிட்டு உள்ளார். இதனால் டிவிட்டரில் வரட்டி குறித்த விவாதம் சூடு பிடித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.