close
Choose your channels

மெக்கா புனித பயணம் சென்ற இயக்குனர் அமீர் வீட்டில் நிகழ்ந்த துயரம்: திரையுலகினர் இரங்கல்

Wednesday, July 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் அமீர் மெக்கா புனித பயணம் மேற்கொண்ட நிலையில் அவரது வீட்டில் நிகழ்ந்த துயரம் காரணமாக மெக்கா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு அவர் திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

’மௌனம் பேசியதே’ ’பருத்தி வீரன்’ உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் அமீர் என்பதும் அவர் இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இயக்குனர் அமீர் கடந்த 2 ஆம் தேதி தன்னுடைய குடும்பத்தினருடன் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் ஜூலை 16ஆம் தேதி வரை தங்குவதற்காக திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் இயக்குனர் அமீரின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாயாரின் மறைவு செய்தி அறிந்ததும் மெக்கா சென்று இருந்த அமீர், விமானம் மூலம் மதுரை திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமீர் தாயாரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மெக்காவிலிருந்து அமீர் திரும்பினாலும் அவரது மகள் மற்றும் மனைவி மெக்காவில் தான் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment