close
Choose your channels

திருமணத்திற்கு முன்பே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் அமீர்-பாவனி!

Monday, September 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி ஆகிய இருவரும் விரைவில் வாழ்க்கையில் இணைய உள்ள நிலையில் அதற்கு முன்பே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக அமீர் மற்றும் பாவனி ரெட்டி ஆகிய இருவரும் கலந்து கொண்டனர் என்பது தெரிந்ததே. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது என்பதும், அமீர் தனது காதலை வெளிப்படையாக கூறிய நிலையில், பாவனி அதை உள்ளுக்குள் ரசித்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.

இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு நடனம் ஆடினார்கள் என்பதும் அது மட்டுமன்றி அவர்களது கடின உழைப்புக்கு பிக்பாஸ் ஜோடி டைட்டில் வின்னர் என்ற பெருமையும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் ஜோடி டைட்டில் வின்னர் வென்ற பின்னர் முதல் முறையாக வெளிப்படையாக தனது காதலை பாவனி ரெட்டி வெளிப்படுத்தி உள்ளார். இதனை அடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்யும் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அமீர் மற்றும் பாவனி ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.