அமிதாப் அறிவுரையை கடைபிடிக்க தவறிய ரஜினிகாந்த்!

  • IndiaGlitz, [Tuesday,December 17 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று ’தர்பார்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்

இந்த ட்ரெய்லர் விழாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தனக்கு மூன்று அறிவுரை கூறியதாகவும் அந்த அறிவுரைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்

முதல் அறிவுரையாக தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் இரண்டாவது அறிவுரையாக எப்போதும் பிஸியாக இருக்க வேண்டும் என்றும் மூன்றாவது அறிவுரையாக எந்த காரணத்தை முன்னிட்டும் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்

ஆனால் முதல் இரண்டு அறிவுரைகளை தம்மால் தொடர முடிந்தது என்றும் ஆனால் மூன்றாவது அறிவுரையை தொடர முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். இதிலிருந்து அவர் அரசியலுக்கு வர உள்ளது உறுதியாகிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் அமிதாப்பின் அறிவுரையை அவர் கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தர்பார் படத்தின் டிரைலர் வெளியான 12 மணி நேரத்தில் ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

கேரள அரசு, அரசியல் சாசனத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு அல்ல..! - முதல்வர் பினராய் விஜயன்

கேரள அரசு, அரசியல் சாசனத்துக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டது என்றும் ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் உள்நோக்கம் கொண்ட திட்டங்களுக்கு அல்ல என்றும் தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

ஒரிஜினலாவே நான் வில்லன்ம்மா: சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' டிரைலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தர்பார்' படம் வரும் பொங்கலன்று வெளியாக இருக்கும் நிலையில்

இங்கே யாரும் என்னை மதிப்பதில்லை...! - மேற்குவங்க கவர்னர் ஜக்தீப் தன்கர்.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு தற்போது சரியாக இருக்கிறதா என்று கேட்டதற்கு தலைமை செயலாளரும், டி.ஜி.பியும் எனக்கு பதில் சொல்ல மறுத்துவிட்டனர்

ஜமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தை அறிவித்த பனாரஸ் இந்து கல்லூரி மற்றும் பல கல்லூரிகள்..!

நடந்த இந்த வன்முறைக்கு ஜாமியா வன்முறைக்கு தாங்கள் காரணமில்லை என்றும், டெல்லி காவல்துறையை சேர்ந்த சில அதிகாரிகளும், உள்ளூர் குண்டர்களுமே இந்த வன்முறைக்கு காரணம் என்று மாணவர்கள் கூறுகின்றனர்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மாபெரும் பேரணி..!

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டது போல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பேரணியில் ஈடுபட்டுள்ளார்