என் பேரன் கல்யாணத்திற்குள்ளாவது ரஜினி அரசியலுக்கு வருவாரா? பிரபல அரசியல் தலைவர் கிண்டல்

  • IndiaGlitz, [Monday,June 12 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1996ஆம் ஆண்டில் இருந்து கடந்த இருபது வருடங்களாக அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் 'போர் வரும்போது பார்த்து கொள்ளலாம்' என்று தான் அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவதை திரையுலகில் சேர்ந்த சிலரும், அரசியல் கட்சியை சேர்ந்த சிலரும் கிண்டலடித்து வருகின்றனர். வழக்கம்போல் ரஜினி தன்னுடைய படங்கள் வெளிவரும்போது செய்யும் ஸ்டண்ட்களில் இதுவும் ஒன்று என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஈராட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாமக இளைஞர் சங்க மாநில தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசியபோது, 'நடிகர் ரஜினிகாந்த் எனக்கு கல்யாணம் நடக்கும் போதே அரசியலுக்கு வரலாம். வருவார் என்றனர். பின்னர் என் மகள் கல்யாணம் நடந்த போது அவர் அரசியலுக்கு வரலாம். வருவார் என்றனர். போகிற போக்கை பார்த்தால் என் பேரன் கல்யாணம் நடக்கும் போதாவது அவர் அரசியலுக்கு வருவாரா? தெரியவில்லை' என்று கிண்டலுடன் பேசினார்.
சமீபத்தில் ரசிகர்களின் சந்திப்பின்போது ரஜினி பேசியபோது, 'அன்புமணி ராமதாஸ் நல்லா படிச்சவர், உலகம் முழுக்க சுற்றியவர், நல்ல திட்டங்கள் வைத்துள்ளார்கள்' என்று புகழ்ந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழக முதல்வருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் திடீர் சந்திப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் இன்று திடீரென சந்தித்தார்.

விஜய்மல்லையா ஒரு திருடன்: லண்டனில் கோஷமிட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்

பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கிவிட்டு அதனை கட்டாமல் இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுவிட்டார்

விக்ரம்பிரபுவின் 'சத்ரியன்' ஓப்பனிங் வசூல் எப்படி?

விக்ரம்பிரபு, மஞ்சிமாமோகன் நடிப்பில் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான 'சத்ரியன்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனத்தை பெற்றபோதிலும் தமிழகம் முழுவதும் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது.

பாகுபலி 2: 7வது வாரத்திலும் எழுச்சிமிகு வசூல். ரூ.20 கோடியை நெருங்கிய 'பாகுபலி 2'

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்பட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி ரூ.1700 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

சென்னை சில்க்ஸ் கட்டிட இடிப்புப் பணியில் தொழிலாளி உயிரிழப்பு

சில வாரங்களுக்கு முன் சென்னை தியாகராய நகரில் உள்ள பிரம்மாண்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டு தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..