close
Choose your channels

தமிழக முதல்வருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் திடீர் சந்திப்பு

Monday, June 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் இன்று திடீரென சந்தித்தார். முதல்வரின் சென்னை இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில் திரையுலகில் உள்ள பெண் கலைஞர்களின் பாதுகாப்பிற்காக சமீபத்தில் நடிகை வரலட்சுமி ஆரம்பித்த 'சேவ் சக்தி' என்ற அமைப்பு குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.

ஏற்கனவே நடிகை வரலட்சுமி பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்ய மகிளா நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரனை செய்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு இரண்டு கோரிக்கைகள் வைத்திருந்தார். இந்த கோரிக்கைகள் குறித்து அவர் நேரில் முதல்வரிடம் விளக்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.