இன்று வெளியாகும் ஆண்ட்ரியா படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்.. என்ன காரணம்..!

  • IndiaGlitz, [Friday,March 29 2024]

நடிகை ஆண்ட்ரியா நடித்த ’கா தி பாரஸ்ட்’ என்ற திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் இந்த படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், நாஞ்சில் இயக்கத்தில், ஜான் மேக்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’கா தி ஃபாரஸ்ட்’. இந்த படம் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று எய்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ’கா தி பாரஸ்ட்’ படத்தின் தயாரிப்பாளர் தன்னிடம் 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகவும் அந்த கடனை அவர் திருப்பி தரவில்லை என்றும் அதனால் தன்னுடைய கடனை திருப்பி செலுத்தாமல் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்றும் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ’கா தி ஃபாரஸ்ட்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதோடு இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 12ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதுவரை இந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

More News

தனுஷின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்? 10 நிமிடத்தில் எடுக்கப்பட்ட முடிவு..!

தனுஷின் அடுத்த திரைப்படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

குக் வித் கோமாளி பிரபலத்துடன் அம்மு அபிராமி காதலா? கலாய்க்கும் ஷிவாங்கி, குரேஷி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அம்மு அபிராமி அந்த நிகழ்ச்சியின் பிரபலம் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 வருடங்களுக்கு முன் தாக்கல் செய்த விவாகரத்து மனு.. திடீரென மனைவியுடன் சமரசம் ஆன 'பேட்ட' நடிகர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'பேட்ட' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்ய மூன்று ஆண்டுகளுக்கு

திருப்பரங்குன்றம் முருகன் திருக்கல்யாணம்: மீனாட்சி அம்மன் முன்னிலையில் கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் இன்று நடைபெற்ற முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு பரவசம் அடைந்தனர்.

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

வில்லேஜ் குக்கிங் சேனலில் வரும் பெரியவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு என்ன ஆச்சு என்பது குறித்து அவரது பேரன் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.