close
Choose your channels

இன்று வெளியாகும் ஆண்ட்ரியா படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்.. என்ன காரணம்..!

Friday, March 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஆண்ட்ரியா நடித்த ’கா தி பாரஸ்ட்’ என்ற திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் இந்த படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், நாஞ்சில் இயக்கத்தில், ஜான் மேக்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’கா தி ஃபாரஸ்ட்’. இந்த படம் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று எய்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ’கா தி பாரஸ்ட்’ படத்தின் தயாரிப்பாளர் தன்னிடம் 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகவும் அந்த கடனை அவர் திருப்பி தரவில்லை என்றும் அதனால் தன்னுடைய கடனை திருப்பி செலுத்தாமல் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்றும் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ’கா தி ஃபாரஸ்ட்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதோடு இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 12ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதுவரை இந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.