ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்த அனில் கும்ப்ளே… என்ன காரணம்?

  • IndiaGlitz, [Tuesday,July 06 2021]

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சுழல்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியை நேரடியாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.

ஆந்திராவில் புதிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று அமையவுள்ளது. இந்த விளையாட்டுப் பல்கலைக்கழகத்தைக் குறித்து அனில் கும்ப்ளே, ஆந்திர முதல்வருடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்திற்கு தனது முழு ஆதரவைத் தருவதாகக் கூறிய அவர், அதன் பயிற்சி மற்றும் நிர்வாகத்தில் முழு பங்களிப்பை தன்னால் கொடுக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். மேலும் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான உபகரணங்களை ஆந்திராவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் எனவும் அதற்கான தொழிற்சாலைகளை இங்கேயே உருவாக்கலாம் எனவும் ஆலோசனை கூறி இருக்கிறார்.

இதற்காக ஜலந்தர் மற்றும் மீரட்டில் உள்ள விளையாட்டு உபகரண தொழிற்சாலைகளைப் பற்றியும் அனில் கும்ப்ளே சுட்டிக் காட்டியுள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டனான அனில் கும்ப்ளே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே ஸ்பின்னர் என்ற பெருமையைக் கொண்டவர்.

மேலும் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் உலகச் சாதனையைப் படைத்தவர். கோலி கேப்டனாக இருந்த கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. தற்போது ஆந்திராவில் அமையவுள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு தனது முழு ஒத்துழைப்பை தருவதாக அவர் நம்பிக்கை தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கவர்ச்சி ஆட்டம், ஆபாச பேச்சு....! சில்மிஷ சிக்காவுடன் ரவுடி பேபி சூர்யா பிரபலமானது எப்படி....?

திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையம் என்ற பகுதியில் சபரிநகரில் வசித்து வருபவர் தான் ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமி. டிக்டாக்-கில் ஆரம்ப காலத்தில் ஆடல், பாடல் வீடியோக்கள் பதிவிட்டு

நடிகர் கார்த்தி சந்திப்பு எதிரொலி: உடனடியாக செயல்பட்ட முதல்வர் ஸ்டாலின்!

மத்திய அரசு சமீபத்தில் ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதாவை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்ததை அடுத்து தமிழ் திரை உலகில் உள்ள பிரபலங்கள் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்

தெலுங்கு சினிமாவில் நடிகர் தனுஷ்… புது அப்டேட் குறித்து வெளியான பரபரப்பு தகவல்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் ஏற்கனவே பாலிவுட்டில் வரவேற்பை பெற்று இருக்கிறார்.

கணவருடன் நெருக்கமான ரொமான்ஸ்: நடிகை ஸ்ரேயா சரண் வீடியோ வைரல்!

கணவருடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் வீடியோக்களை நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. 

சரண்யா - பொன்வண்ணன் மகள் திருமணம்: முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஆச்சரியம்!

நடிகை சரண்யா மற்றும் இயக்குனர் பொன்வண்ணன் தம்பதியின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆச்சரியம் அளித்துள்ளது.