சர்ச்சைக்குரிய பீப் பாடல் குறித்து அனிருத் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,December 14 2015]

கடந்த சில நாட்களாக இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் செய்தி சிம்பு-அனிருத்தின் பீப் பாடல். இந்த பாடலில் பெண்களை அவமதிக்கும் வார்த்ததகள் இருப்பதாக பலர் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் கோவை காவல்நிலையத்தில் அனிருத் மற்றும் சிம்பு மீது புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் கடந்த சில நாட்களாக கனடா தலைநகர் டொரண்டோவில் இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அனிருத், தற்போது இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் தற்போது டொரண்டோ நிகழ்ச்சி ஒன்றில் பிசியாக இருக்கின்றேன். தற்போது பரவி வரும் பீப் பாடல் குறித்து விளக்கமளிக்க விரும்புகிறேன். இந்த பாடலை நான் பாடவோ, இசையமைக்கவோ இல்லை.

நான் பெண்களை மிகவும் மதிப்பவன் என்பது அனைவருக்கும் தெரியும். இதுவரை நான் பாடிய எந்த பாடலிலும் பெண்களை இழிவுபடுத்தி பாடியதில்லை' என்று கூறியுள்ளார்.

More News

முதல்வர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 65வது பிறந்த தினம் கடந்த 12ஆம் தேதி அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது...

தேவிஸ்ரீ பிரசாத் தந்தை காலமானார்

பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் அவர்களின் தந்தை மாரடைப்பால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 61...

'ஈட்டி' திரைவிமர்சனம். கூர்மையான பாய்ச்சல்

புதிய இயக்குனரின் படைப்பு, இன்னும் ஒரு சூப்பர் ஹிட் கூட கொடுக்காத அதர்வா என ஒருபக்கமும், ராசியான நாயகி ஸ்ரீதிவ்யா மற்றும் வெற்றி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் என மறுபக்கத்தையும்...

'எந்திரன் 2' படத்தில் இருந்து விலகிய முக்கிய நடிகர்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 'எந்திரன் 2' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள...

சென்னைக்கு 'தங்க மகன்' டீம் கொடுத்த ரூ.1கோடி?

சென்னை வெள்ள நிவாரணத்திற்கு கோலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் தாராளமாக நிதி வழங்கி வருவது குறித்து அனைவரும் அறிவோம்....