close
Choose your channels

சர்ச்சைக்குரிய பீப் பாடல் குறித்து அனிருத் விளக்கம்

Monday, December 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் செய்தி சிம்பு-அனிருத்தின் பீப் பாடல். இந்த பாடலில் பெண்களை அவமதிக்கும் வார்த்ததகள் இருப்பதாக பலர் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் கோவை காவல்நிலையத்தில் அனிருத் மற்றும் சிம்பு மீது புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் கடந்த சில நாட்களாக கனடா தலைநகர் டொரண்டோவில் இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அனிருத், தற்போது இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் தற்போது டொரண்டோ நிகழ்ச்சி ஒன்றில் பிசியாக இருக்கின்றேன். தற்போது பரவி வரும் பீப் பாடல் குறித்து விளக்கமளிக்க விரும்புகிறேன். இந்த பாடலை நான் பாடவோ, இசையமைக்கவோ இல்லை.

நான் பெண்களை மிகவும் மதிப்பவன் என்பது அனைவருக்கும் தெரியும். இதுவரை நான் பாடிய எந்த பாடலிலும் பெண்களை இழிவுபடுத்தி பாடியதில்லை' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.