close
Choose your channels

கர்ப்பிணியை கொன்று கால்வாயில் வீசிய கயவர்கள்: இன்னொரு ஆணவக்கொலை?

Thursday, November 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சங்கர், கோகுல்ராஜ், நந்தீஷ் என சாதிய ஆணவக்கொலைகள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இந்த ஆணவக்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூரில் கர்ப்பிணி ஒருவர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பெங்களூர் அருகே உள்ள கேவிஎம் தொட்டியைச் சேர்ந்த ஜோதி என்ற பெண் பக்கத்து கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவரை காதலித்து வந்தார். முத்துராஜ் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் ஜோதியின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய முத்துராஜ்-ஜோதி ஜோடி திருமணம் செய்து கொண்டனர். ஒருசில மாதங்களில் ஜோதி கர்ப்பமானதை அடுத்து முத்துராஜின் சொந்த ஊருக்கு இருவரும் வந்தனர். இதனையறிந்த ஜோதியின் பெற்றோர் முத்துராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரம் வந்து ஜோதியை கடத்தி சென்று கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்து கால்வாயில் வீசி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய ஜோதியின் பெற்றோர் உள்பட 5 பேர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெற்ற மகள் கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும் ஆணவக்கொலை செய்த கயவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.