சூப்பர் ஸ்டார்களுடன் அடுத்தடுத்து இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்?

  • IndiaGlitz, [Wednesday,November 04 2015]

அருள்நிதி நடித்த 'மெளன குரு' படத்தின் இந்தி ரீமேக் படமான 'அகிரா' படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்புகளை ஏ.ஆர்.முருகதாஸ் முடித்துவிட்டதாகவும், இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது. இந்நிலையில் முருகதாஸ் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கவுள்ள படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. மகேஷ்பாபுவின் படத்தை முடித்த பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும், சமீபத்தில் முருகதாஸ் கூறிய கதை ஒன்றை சல்மான்கான் ஒகே செய்துவிட்டதாகவும், இந்த படத்திற்காக தேதிகளை விரைவில் அவர் ஒதுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இளையதளபதி விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் ஆகியோர்களின் படங்களை அடுத்தடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல்-அமலா படத்தில் இணையும் இளம் ஹீரோயின்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை அமலா நடிக்கவுள்ளதாகவும்...

'எந்திரன் 2': அர்னால்ட் நிபந்தனையை ஷங்கர் ஏற்பாரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விரைவில் 'எந்திரன் 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ரஜினிகாந்த்,...

தேசிய விருது பெற்ற நடிகரின் நிச்சயதார்த்த தேதி

பீட்சா, சூது கவ்வும், நேரம் போன்ற படங்களில் நடித்த நடிகர் பாபிசிம்ஹா, 'ஜிகர்தண்டா' படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்...

ரஜினி-விஜய் படங்களின் வியாபாரம் தொடக்கம்?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் என்றாலே வியாபாரம் பிரம்மாண்டமாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. 17 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ரஜினியின் 'படையப்பா'...

இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ஏ.எம்.ரத்னம்

கமல், அஜீத், விஜய், சிரஞ்சீவி, பவண்கல்யாண் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம்...